Monday, March 22, 2021

 எம் பெருமான் இனிய ஈசனே உன்னை பேசா நாள் எல்லாம் பிறவாத நாளே 🙏🙏

எதிர்மறை சக்திகள் அகற்ற உதவும் உப்பு:

  உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது

ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது.

தினமும் உப்புத் தண்ணீரால்  வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்படுகிறது. 

ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்  துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /  கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.

உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏

ஆலவாயர் அருட் பணி மன்ற குருவான என் அன்பு தந்தையே ஆத்ம நமஸ்காரம் 🙏🙏

இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற ஈசன் அருள் புரியட்டும் 🙏🙏


#உப்பு #தேன்  என்ன செய்யும்.


♥️உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!-


♥️உப்பின் தன்மை என்ன ?

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு... உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் , இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்

இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..


♥️ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .

உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் . சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...


♥️#தேன்....

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . 


♥️இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .

ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .

இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..


♥️மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-


♥️1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .


♥️2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .

தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .


♥️3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்

நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது 

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )

இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த

உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi .

உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது

கருவாடு ,உறுகாய்,போண்றவைகள் உதாரணம் ...


♥️நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...

தேன் தேவகுணம் உடையது

உப்பு அசுரகுணம் உடையது

தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்

உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும் ..


இவைகள் உடல் சார்ந்த விவரம் 

♥️அகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...


No comments:

Post a Comment