Thursday, April 26, 2018

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் செய்ய வேண்டியவை.!

வீட்டு மருத்துவம்....!
 
👉 தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
 
👉 வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
 
👉 வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
 
👉 மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.
 
👉 கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
 
👉 ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
 
👉 இஞ்சியை சாறு எடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.
 
👉 தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
 
👉 இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
 
👉 காலையில் எழுந்ததும் யோகப் பயிற்சி செய்து பழக வேண்டும்.
 
👉 நன்கு பசியெடுத்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.
 
👉 தினமும் ஒரு பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
👉 கொதிக்க வைத்த தண்ணீர், நீருடன் கலந்த மோர், உருக்கிய நெய் இவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
👉 முதல் நாள் சமைத்த உணவை அடுத்த நாள் சாப்பிடக்கூடாது.
 
👉 இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.
 
👉 சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.
 
👉 சாப்பிட்ட உடன் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.
 
👉 நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
*********************************************************************************
 
 

படித்ததில் பிடித்தது !

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் !!
 
👉 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு சாப்பிடுங்கள்.
 
👉 நமது வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான செரிமான அமிலங்கள் உள்ளது. இந்த செரிமான அமிலங்கள் நாம் உண்ணும் உணவை செரிக்க வைப்பதற்கு உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். எச்சிலானது உணவை உடைப்பதற்கான என்சைம்களை சுரக்க உதவுகிறது. 
 
👉 ஆனால், நாம் உணவுடன் தண்ணீர் அருந்துவதால் இந்த செரிமான அமிலங்கள் நீர்த்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
 
👉 சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரை குடித்து வரலாம். அவ்வாறு சாப்பிடும் முன்பாக வெந்நீரைக் குடிப்பதால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
 
👉 சப்பாத்தி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது போன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 
 
👉 எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 
 
👉 சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பு மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிக்கலாம். ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.
***************************************************************************
 
உடலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின்கள் !! 
 
வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்கியத்திற்கு இவை தேவைப்படுகின்றன. நமது உடலில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்தே எந்த வைட்டமின் நமது உடலில் குறைகிறது என்பதைக் கண்டறிந்து அந்த வைட்டமின்களை பெற எந்த விதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
 
வைட்டமின் ஏ பயன்கள் :
 
கண் பார்வை, மரபணு படியெடுத்தல், நோய் எதிர்ப்புச் செயல்பாடு, எலும்பு வளர்சிதை மாற்றம், இரத்த உற்பத்தி, சரும ஆரோக்கியம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது.
 
வைட்டமின் ஏ குறைந்தால் :
 
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர இதுதான் முக்கியக் காரணம்.
 
வைட்டமின் பி பயன்கள் :
 
வளர்சிதைமாற்ற தாக்கங்களுக்கு வைட்டமின் பி துணையாக இருக்கும், ஆரோக்கியமான தோல், முடி, தசை நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, நரம்புத் தொகுதி தொழிற்பாட்டைக் கூட்டும், உயிரணு வளர்ச்சி, உயிரணுப்பிரிவை மேம்படுத்துதல், ரத்தசோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.
 
வைட்டமின் பி குறைந்தால் :
 
இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
 
வைட்டமின் சி பயன்கள் :
 
உடல் சீராக வளர உதவும்.
உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. 
பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. 
 
வைட்டமின் சி குறைந்தால் :
 
வைட்டமின் சி குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீக்கம் உண்டாகும். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
 
வைட்டமின் டி :
 
வைட்டமின் டி இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். 
வைட்டமின் டி போதிய அளவு இல்லாததால் மனஅழுத்தம், உடல் பருமன் முதுகுவலி, மூச்சிரைப்பு, உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
வைட்டமின் ஈ பயன்கள் :
 
வைட்டமின் ஈ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. 
கண்புரை ஏற்படுவதைத் தவிர்க்கும்.
இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
 
வைட்டமின் ஈ குறைந்தால் :
 
வைட்டமின் ஈ குறைந்தால் மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு, தசைகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  *******************************************************************************

கோலம் போடுவது எதற்கு? இதற்கு பின் மறைந்துள்ள ரகசியம் என்ன? 
 
ஏன் கோலம் போட வேண்டும்?
 
 வீடுகளில் கோலம் போடுகிறோம். இவை சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. ஆனால் கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்ப்பது ஏன்? 
 
🌟 இதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தான் என்ன? கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
 
🌟 வீட்டில் உள்ள பெண்கள் மகிழ்ச்சி, வெறுப்பு, கஷ்டம் என பல மனநிலைகளில் இருப்பார்கள். இதில் வெறுப்பு என்பது மட்டும் வீட்டில் இருக்கவே கூடாது. 
 
🌟 அப்படி வெறுப்பு இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவரின் மகிழ்ச்சியையும் சீர்குலைந்து விடும். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பு உணர்வை கவர்ந்து கொள்ளும்.
 
🌟 இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது நேர்த்தியாக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
 
🌟 ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
 
🌟 குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
 
🌟 நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் வரவேண்டும். இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். ஆக, அவர்கள் வகுத்த அறிவியல் தத்துவங்கள் பொய்யல்ல என்பதே உண்மை.
*****************************************************************************
 
இப்படிதானா உங்களுடைய வாழ்க்கையும்?
 
ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் அவருக்கு குணமாகவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, 'நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?" என்றார். அதிர்ச்சி அடைந்த கணவன், 'உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றார். அதற்கு மனைவி சொன்னாள் : எனக்கொன்றும் இல்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க. அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குரைக்கறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க. அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை வெட்னரி டாக்டர் தான் குணப்படுத்த முடியும்" என்றார். இதைக்கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, 'என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?" என்று முடித்தாள் மனைவி.
 
ஒருவரின் கலையை திருடமுடியாது..!!
 
ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது. 'ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால், மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்தவில்லையா?
 
அதற்கு தேனீயின் பதில் : இல்லவே இல்லை! ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும்தான் திருட முடியும். ஆனால், தேனை உண்டாக்கும் கலையை ஒருபோதும் அவன் என்னிடமிருந்து திருட முடியாது.
 
 
இன்றைய பொன்மொழிகள்..!!
 
⏩ உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே...!!
நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு..
 
⏩ இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 
நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.
 
⏩ ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது 
மனதின் அமைதித்தன்மையைப் பொறுத்தது.
 
⏩ எவன் ஒருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ,
அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான்.
**********************************************************************************

பொன்மொழிகள்..!!
👍 நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்..

👍 நாம் வாழும் போது யாரை அழுக வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்..

👍 உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!!





சிந்திக்க வைக்கும் வரிகள்..!!
👌 ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர் தான் . . . . . .

👌 குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை. ஆனால், அதற்கு பயப்படாமல் அவரை பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர் தான் . . . . . . .

👌 ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம் நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல். அதற்கு பெயர் தான் . . . . . . . .

👌 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் . . . . . . . . .

👌 உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர் தான் . . . . . . . . .

                     பெருத்தமான விடை . . . . . . . ."நம்பிக்கை" -அதானே எல்லாம்
*************************************************
நம் முன்னோர்கள் இதை அணிய சொல்ல காரணம் என்ன? 
 
வளையல் குலுங்க... வளரும் உடல் ஆரோக்கியம்!
 
 நம்முடைய கலாச்சாரத்தில் பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஒன்று...! வளையல் அணியும் பழக்கத்தை ஏதோ ஒரு காரணமாகத் தான் நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் நாம் அடையும் மருத்துவ பயன்கள் ஏராளம். 
 
நேர்மறையான எண்ணங்கள் :
 
👉 வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
 
👉 இதனால் நம்முடைய எண்ணங்கள் தெளிவு பெற்று, மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி வளையல் அணிவதால், அது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.
 
எந்த வடிவம் சிறந்தது? 
 
👉 இன்றைய காலக்கட்டத்தில் பல வடிவங்களில் வளையல்கள் கிடைத்தாலும், பாரம்பரிய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. 
 
👉 வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்க குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.
 
எந்த வகை? என்ன பயன்?
 
👉 தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது சிறந்தது. உடல் பருமனாக இருப்பவர்கள் செம்பு வளையல்கள் அணிவதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும். 
 
👉 பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது.
 
👉 சிப்பி, கிளிஞ்சல் வளையல்கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை. 
 
கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிவதற்கான அறிவியல் காரணங்கள்?
 
👉 கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் வயிற்றில் இருக்கும் குழந்தையில் மூளை நன்றாக செயல்படும்.
 
👉 பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும். 
 
வளையல் எப்படி அணிய வேண்டும்?
 
👉 மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சிறியதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. 
 
எந்த நிறத்தில் அணிய வேண்டும்?
 
👉 மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
 
👉 குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்திற்குள்ளது. ஊதா நிற வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பழுப்பு நிற வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும்.
 
👉 மஞ்சள் நிற வளையல்கள், நேர்மறையான எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். 
 
இனி, ஆரோக்கியத்தை நினைத்து அணிவோம் வளையல்!
 

படித்ததில் பிடித்தது !

உங்கள் கவலையை மறக்க இதை படிங்க...!!
 
 
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற !
 
ராமு ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்... 
 
மேலாளர் : நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..
 
ராமு : சரி சார்.. முயற்சி பண்றேன்..
 
மேலாளர் : இரவு?
 
ராமு : பகல்...
 
மேலாளர் : புதுமை? 
 
ராமு : பழமை..
 
மேலாளர் : வறுமை? 
 
ராமு : செழுமை..
 
மேலாளர் : வெரி குட்... கரெக்டா சொல்றியே ! 
 
ராமு : வெரி பேடு... தப்பா சொல்றியே...
 
மேலாளர் : ஆங்... ம்ம்ம்... ஆக்கல்? 
 
ராமு : அழித்தல்...
 
மேலாளர் : அழகு?
 
ராமு : ஆபத்து..
 
மேலாளர் : தப்பு..
 
ராமு : சரி.... 
 
மேலாளர் : இல்ல தம்பி.. நீங்க சொல்றது தப்பு.. 
 
ராமு : ஆமா அண்ணே! நான் சொல்றது சரி..
 
மேலாளர் : நீங்க கிளம்பலாம்..
 
ராமு : நீங்க இருக்கலாம்...
 
மேலாளர் : போதும்.. வெளியே போப்பா !!! 
 
ராமு : வேணும்.. உள்ளே வாப்பா !!! 
 
மேலாளர் : நிறுத்துடா...
 
ராமு : ஆரம்பிடா..
 
மேலாளர் : ஐயோ கடவுளே!!! என்ன காப்பாத்து!!
 
ராமு : ஆஹா பிசாசே!! இவன கொல்லு...
 
மேலாளர் : யு ஆர் ரிஜக்டேடு...
 
ராமு : ஐ ஆம் செலக்டேடு !
 
மேலாளர் : ?!?!?!.. போதும் நீ செலக்டேடு தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்.. இப்போ நீ போப்பா..
 
ராமு : ரொம்ப தேங்க்ஸ் சார்.. உனக்குள் நான்! எனக்குள் நீ!!
 
Just Smile :)  :happy:  :thumbup: 
 
ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. (இப்பவாவது கொஞ்சம் சிரிங்க ஜி) 
************************************************************************************
 
ஏன் நிலை வாசற்படியில் பெண்கள் அமரக்கூடாது?
 
 
 
🌟 இன்றைய காலத்தில் பெண்கள் நிலைவாசற்படியில் உட்கார்ந்து கொண்டுதான் தலை வாருவார்கள். ஆனால், முன் காலத்தில் வாசற்படியில் பெண்களோ, சிறுவர்களோ குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணோ அமர்ந்திருந்தால், வீட்டில் உள்ள பெரியோர்கள் அவர்களை திட்டுவார்கள். படியில் அமரக்கூடாது என்று உபதேசமும் செய்வார்கள். இப்படியெல்லாம் ஏன் கூறுகிறார்கள் என யோசித்து பார்த்திருக்கிறீர்களா? 
 
அதைப் பற்றி இங்கு காண்போம்.
 
🌟 வீட்டு வாசல் நிலையின் நான்கு பக்கங்களும் சதுரமான வடிவத்தில் உள்ளதால் அந்த இடத்தில் எதிர்மறை சக்திகள் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
 
🌟 நாம் வாசற்படியில் அமர்ந்துள்ள போதோ அல்லது நிற்கும் போதோ நம் உடலில் எதிர்மறை சக்திகள் புகுந்து விடும் என்ற காரணத்தினால் தான் அவ்வாறு கூறியுள்ளனர்.
 
🌟 இதனாலேயே யாராவது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுத்தாலும் அல்லது வாங்கினாலும் அவர்களை உள்ளேயே வந்து வாங்கிச் செல்லக் கூறுகிறோம்.
 
🌟 வாசற்படிக்கு அடியில் நின்று சில விஞ்ஞான கருவிகளைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்தால் வாசற்படிக்கு அடியில் எதிர்மறை சக்திகள் இருப்பதைக் காணலாம்.
 
🌟 இதை அன்றே கண்டு கொண்ட நம் முன்னோர்கள் யாரும் நிலை வாசற்படியில் அமரக்கூடாது என்று கூறினார்கள்.
*************************************************************************************
 
இதை படிச்சா உங்களுக்கு கண்டிப்பா சிரிப்பு வரும்..!!
 
 
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
 
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
 
மறுநாள் அவர் வீட்டு வாசலில் ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. மாமியாரின் அன்புப் பரிசு..
 
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.. மாமியாரின் அன்புப் பரிசாக...
 
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார கடைசியா பரிதாபமா பார்த்து சொன்னான்... எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கில்ல போயிக்கிறேன்.. பொண்ணா வளர்த்து வச்சிருக்க..? 
 
மாமியார் செத்த மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.. மாமனாரின் அன்புப் பரிசு என்ற அட்டையோட...!
 
Just smile :)  :happy:  :thumbup: 
 
அடிக்குற வெயில்ல வெள்ளைக்காரன் கூட கருப்பாயிடுறான்...
ஆனா...
இந்த வெள்ளை முடி மட்டும் கருப்பாக மாட்டேங்குது...
நம்ம கவலை நமக்கு....!
 
 
ஏன்? ஏன்? ஏன்?
 
குருடர்கள் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்...????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு.
 
கண் பார்வை தெரிந்தவர்கள் தான்
அதிகமாக கீழே விழுகின்றார்கள்.
ஏன்...???
பார்வை தான் இருக்கிறதே,
என்ற அலட்சிய போக்கு.
 
ஆக... விழுவதும்... வீழாமல் இருப்பதும்...
கண்களை பொறுத்தது அல்ல.
 
அது விழிப்புணர்வு என்ற உணர்வை பொறுத்தது.
குருடன் குழியில் விழுவது குற்றமாகாது.
 
பார்வை உள்ளவன் 
 
இரவில் விழுந்த பள்ளத்தில்,
பகலிலும் விழுவது தான் குற்றம்.
***********************************************************************************
இதை நம் முன்னோர்கள் ஏன் கடைபிடித்தார்கள்?
 
 
ஏன் அசைவம் கூடாது....?? 
 
 எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா? அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் கட் என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள்... 
 
அப்படி என்ன தான் காரணம்? 
 
🍗 புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புரட்டாசியில் வெயில் இருக்கும்.
 
🍗 சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. ஆனால் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் அசைவ உணவை தவிர்த்து விடுகிறார்கள் தெரியுமா?
 
🍗 புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழை வர துவங்கும். ஆனால் பூமி குளிரும் படி மழை பெய்யாது.
 
🍗 இதனால் பூமியில் இருந்து அதிக அளவிலான வெப்பம் வெளியில் வரும். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் நாம் அசைவ உணவு உண்பதால் உடம்பில் வெப்பம் அதிகரித்து தேவையற்ற உபாதைகளை தரும். 
 
🍗 புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால், நமது ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் அந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. 
 
🍗 அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
 
🍗 அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
 
🍗 நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைபிடித்த இதை நாமும் கடைபிடித்து நமது உடலை பாதுகாப்போம்.....!!

  *********************************************************************************

படித்ததில் பிடித்தது !

இது உண்மை தானே !!
 
😇 பைக் வாங்குறப்ப இருந்த சந்தோஷம்..
பெட்ரோல் போடும் போது வர்றதே இல்லை...
 
😇 சின்ன வயசுல நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம்..
இப்ப கடைக்காரன்கிட்ட சில்லரை காசு இல்லைனா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு...
 
😇 உலகிலேயே அதிக பொய்களை கொண்ட இரண்டு லெட்டர்கள்..
Love Letter !! Leave Letter !!
 
 
இல்லை.. இல்லை.. இல்லை..!!
 
பிரச்சனை இல்லாவிட்டால்
அவன் மனிதன் இல்லை
 
கடிந்து கொள்ளாவிட்டால்
அவன் கணவன் இல்லை
 
சண்டைகள் போடாவிட்டால் 
அவர்கள் கணவன், மனைவி இல்லை
 
அன்பை பொழியாவிட்டால்
அவர்கள் பெற்றவர்கள் இல்லை
 
தொல்லைகள் தராவிட்டால் 
அவர்கள் பிள்ளைகள் இல்லை 
 
நம்மை புரிந்து கொண்டால்
அவர்கள் உறவினர்கள் இல்லை
 
நம்மை புரிந்து கொள்ளாவிட்டால்
அவர்கள் நண்பர்கள் இல்லை
 
மனிதர்களை கஷ்டபடுத்தாவிட்டால்
அவர் கடவுள் இல்லை..
 
 
அந்தக்காலம்.. இந்தக்காலம்..!!
 
😆 களிய தின்னுட்டு காளைய 
அடக்குனது அந்தக்காலம்....
 
😆 பூரிய தின்னுட்டு கோழிய கூட
புடிக்க முடியாதது இந்தக்காலம்...
 ***********************************************************************************
இருள் என்பது இல்லையா? 
 
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா? என்று. 
 
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். 
 
ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
 
மாணவன் அமைதி காக்கிறான். 
 
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.
 
ஆசிரியர் அனுமதிக்கிறார். 
 
மாணவன் : 'குளிர்நிலை" என்று ஏதேனும் இருக்கிறதா?
 
ஆசிரியர் : ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?
 
மாணவன் : மன்னிக்கவும். தங்களின் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
 
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
 
மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும், இருளையும் அல்ல. 
 
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. 
 
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை. 
 
அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான்.
 
 
இன்றைய பொன்மொழி !!
 
👉 நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்பும் எப்போதுமே மண்டியிட வேண்டிய அவசியமில்லை..
 
👉 நம்பிக்கையுடன் உனது முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படியில் ஏறு..
 
👉 உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துணிவுடன் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உனக்கு வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!.
 
👉 வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் நம்பிக்கையில்லை எனில், நீ நிச்சயம் தோற்றுப்போவாய்..
****************************************************************************
 
கோடை டிப்ஸ் : உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள் !!
 
உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள் !!
 
👉 கோடை காலம் வந்துவிட்டது. இனி தான் நமது உடலை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் நமது உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.
 
மண் பானை குடிநீர் :
 
👉 மண் பானை குடிநீரை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். நமக்கு சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
 
இளநீர் :
 
👉 இளநீரில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.
 
லெமன் ஜூஸ் :
 
👉 தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது.
 
தர்பூசணி :
 
👉 தர்பூசணி உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சுத்தன்மையை போக்குகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது.
 
சோற்றுக்கற்றாழை :
 
👉 சோற்றுக்கற்றாழை அதிகக் குளிர்ச்சியை தரக்கூடியது. சோற்றுக்கற்றாழையின் சதைப் பகுதியை ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம்.
 
நெல்லி :
 
👉 நெல்லிக்காயில் வைட்டமின் 'சி" நிறைந்துள்ளது. இதனுடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.
 
நீர்மோர் :
 
👉 தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.
 
காய்கறிகள் :
 
👉 வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்ற பழங்கள் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
 
👉 கோடை காலத்தில் நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.


 

Tuesday, April 17, 2018

Learn Tamil Numbers

Number in English

Tamil Number Name Pronunciation
0 பூஜ்ஜியம் Poojyam
1 ஒன்று Ondru
2 இரண்டு Irandu
3 மூன்று Mundru
4 நான்கு Naangu
5 ஐந்து Aintu
6 ஆறு Aaru
7 ஏழு Aelu
8 எட்டு Ettu
9 ஒன்பது Onbadhu
10 பத்து Pathu


Tamil Numbers Name
Pronunciation
11
பதினொன்று
Padhinondru
12
பன்னிரண்டு
Pannirandu
13
பதிமூன்று
Padhimundru
14
பதினான்கு
Padhinangu
15
பதினைந்து
Padhinaindu
16
பதினாறு
padhinaaru
17
பதினேழு
Padhinaelu
18
பதினெட்டு
Padhinettu
19
பத்தொன்பது
pathuonbadhu
20
இருபது
Irupatu
21
இருபது ஒன்று
Irupattu Ondru
22
இருபத்து இரண்டு
Irupattu Iraṇdu
23
இருபத்து மூன்று
Irupattu Mundru
24
இருபத்து நான்கு
Irupattu Nangu
25
இருபத்து ஐந்து
Irupattu Aintu
26
இருபத்து ஆறு
Irupattu Aaru
27
இருபத்து ஏழு
Irupattu Aelu
28
இருபத்து எட்டு
Irupattu Ettu
29
இருபத்து ஒன்பது
Irupattu Onbadhu
30
முப்பது
Muppattu
31
முப்பத்து ஒன்று
Muppattu Ondru
32
முப்பத்து இரண்டு
Muppattu Irandu
33
முப்பத்து மூன்று
Muppattu Mundru
34
முப்பத்து நான்கு
Muppattu nangu
35
முப்பத்து ஐந்து
Muppatu Aintu
36
முப்பத்து ஆறு
Muppatu Aaru
37
முப்பத்து ஏழு
Muppattu Aelu
38
முப்பத்து எட்டு
Muppattu Ettu
39
முப்பத்து ஒன்பது
Muppattu Onbadhu
40
நாற்பது
Narpatu
41
நாற்பத்து ஒன்று
Narpatu ondru
42
நாற்பத்து இரண்டு
Narpatu Irandu
43
நாற்பத்து மூன்று
Narpatu Mundru
44
நாற்பத்து நான்கு
Narpatu Nangu
45
நாற்பத்து ஐந்து
Narpatu Aindu
46
நாற்பத்து ஆறு
Narpatu Aaru
47
 நாற்பத்து ஏழு
Narpatu Aelu
48
நாற்பத்து எட்டு
Narpatu Ettu
49
நாற்பத்து ஒன்பது
Narpatu Onbadhu
50
ஐம்பது
Aimpatu
51
ஐம்பத்து ஒன்று
Aimpatu Ondru
52
ஐம்பத்து இரண்டு
Aimpatu Irandu
53
ஐம்பத்து மூன்று
Aimpatu mundru
54
ஐம்பத்து நான்கு
Aimpatu Nangu
55
ஐம்பத்து ஐந்து
Aimpatu Aintu
56
ஐம்பத்து ஆறு
Aimpatu Aaru
57
ஐம்பத்து ஏழு
Aimpatu Aelu
58
ஐம்பத்து எட்டு
Aimpatu Ettu
59
ஐம்பத்து ஒன்பது
Aimpatu Onbadhu
60
அறுபது
Arubadhu
61
அறுபத்து ஒன்று
Arubadhu Ondru
62
அறுபத்து இரண்டு
Arubadhu Irandu
63
அறுபத்து மூன்று
Arubadhu Mundru
64
அறுபத்து நான்கு
Arubadhu nangu
65
அறுபத்து ஐந்து
Arubadhu Aindhu
66
அறுபத்து ஆறு
Arubadhu Aaru
67
அறுபத்து ஏழு
Arubadhu Aelu
68
அறுபத்து எட்டு
Arubadhu Ettu
69
அறுபத்து ஒன்பது
Arubadhu Onbadhu
70
எழுபது
Elupatu
71
எழுபத்தி ஒன்று
Elupatu Ondru
72
எழுபத்தி இரண்டு
Elupatu Irandu
73
எழுபத்தி முச்சக்கர
Elupatu Mundru
74
எழுபத்தி நான்கு
Elupatu Nangu
75
எழுபத்தி ஐந்து
Elupatu Aintu
76
எழுபத்தி ஆறு
Elupatu Aaru
77
எழுபத்தி ஏழு
Elupatu Aelu
78
எழுபத்தி எட்டு
Elupatu Ettu
79
எழுபத்தி ஒன்பது
Elupatu Onbadhu
80
எண்பது
Enbadhu
81
எண்பத்தியொன்று
Enbathiondru
82
எண்பத்திரண்டு
Enbathiirandu
83
எண்பத்திமூன்று
Enbathimundru
84
என்பதினான்கு
Enbathinangu
85
என்பதினைந்து
Enbathiaindhu
86
எண்பத்திஆறு
Enbathiaaru
87
எண்பத்திஏழு
Enbathiaelu
88
எண்பத்தியெட்டு
Enbathiettu
89
எண்பத்தியொன்பது
Enbathionbadhu
90
தொன்னூறு
Thonuru
91
தொண்ணூற்றியொன்று
Thonuriondru
92
தொண்ணூற்றிரண்டு
Thonutrirandu
93
தொண்ணூற்றிமூன்று
Thonutrimundru
94
தொண்ணூற்றிநான்கு
Thonutrinangu
95
தொண்ணூற்றிஐந்து
Thonutriaindhu
96
தொண்ணூற்றியாறு
Thonutriaaru
97
தொண்ணூற்றியேழு
Thonutrielu
98
தொண்ணூற்றியெட்டு
Thonutriettu
99
தொண்ணூற்றிஒன்பது
Thonutrionbadhu
100
நூறு
Nooru
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நூறு one hundred, 100
இருநூறு two hundred, 200
முன்னூறு three hundred, 300
நானூறு four hundred, 400
ஐந்நூறு five hundred, 500
book has: அறுநூறு shouldn't it be ஆறுநூறு? six hundred, 600
ஏழுநூறு seven hundred, 700
எண்ணூறு eight hundred, 800
தொள்ளாயிரம் nine hundred, 900
ஆயிரம் one thousand, 1000
இரண்டாயிரம் two thousand, 2000
மூவாயிரம் three thousand, 3000
நாலாயிரம் four thousand, 4000
ஐயாயிரம் five thousand, 5000
ஆறாயிரம் six thousand, 6000
ஏழாயிரம் seven thousand, 7000
எட்டாயிரம் eight thousand, 8000
ஒன்பதாயிரம் nine thousand, 9000
பத்தாயிரம் ten thousand, (10,000)
இலட்சம், லட்சம் one tenth of a million, 1/10 million, one hundred thousand, (100,000)
கோடி crore, ten million, 10 million, (10,000,000)


-----------------------------------------------------------------------------------------------


English

Tamil
Tamil
101
One hundred one
நூற்றியொன்று 
Nootriondru
115
One hundred fifteen
நூற்றிப்பதினைந்து
Nootripadhinaindhu
200
Two hundred
இருநூறு 
Iranooru
500
Five hundred
ஐநூறு 
Ainooru
850
Eight hundred fifty
எட்நூற்றிஐம்பது 
Etnootriaimbadhu
1000
One thousand
ஆயிரம்
Aayiram
3500
Three thousand five hundred
மூன்றாயிரத்துஐநூறு 
Mundrayirathuainooru
10000
Ten thousand
பத்தாயிரம்
pattayiram
91250
Ninety-one thousand two hundred fifty
தொண்ணூற்றிஓருயிராது இரநூற்றிஐம்பது
thonutrioruayirathu iranutriaimbathu
100000
One lakh
இலட்சம்
lațcam
276493
two lakhs seventy six thousand four hundread nighty three
இரண்டு லட்சத்து எழுவற்றிஆராயிரத்து நானூற்றி தொண்ணூற்றிமூன்று
Irandu latchathu Eluvatri aarayirathu nanootri thonutri mundru
1000000
One Million
பத்து இலட்சம்
pattu lațcam
10000000
One Crore/ Ten Million
கோடி
Kodi
100000000
Ten Crore/ One Billion
பத்து கோடி
pathu kodi