Wednesday, March 17, 2021

சிவ தரிசனம் காணும் மந்திரம்

 அபூர்வ ஒரு மந்திர ரகசியம்

"சி மறியுங் ஊங். சிவாய   ஊங் அங் நம ஓம் என்று ஜெபித்து வந்தால் சிவ தரிசனம் நேரடியாக கிட்டும் என அகத்தியர் தனது நூலில் கூறுகிறார்.

நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் ஆன,

(1)மூலாதாரம்

(2)சுவாதிஷ்டானம்

(3)மணிபூரகம்

(4)அனாகதம்

(5)விசுத்தி

(6)ஆக்கினை

ஆகியவற்றை அறிந்து அதற்குரிய மந்திரங்களை தினமும் ஜெபித்து வர ஞானநிலை எய்தலாம்.

"சிவாய ‌ நம ஓங் சிவ ஓம்" என்று உச்சரித்து வர மூலாதாரத்தில் குண்டலினி சக்தி அடையலாம்.

"யங் சிங் சிவாய நம" என்று உச்சரிக்க சுவாதிஷ்டானம் எனும் ஆதாரம் காணலாம்.

"சிங் ஐயுங் சுவாகா" என்று தினமும் ஜெபித்து வர மணி பூ ரகத்தை காணலாம்.

"வங் லங் வங் சிவாய" என்று உச்சரித்து வர சுவாதிஷ்டானம் தத்துவத்தை அறியலாம்.

"வங் சிங் சிவாய" என்னும் மந்திரத்தினால் அனாகதத்தைக் காணலாம்.

"ஊங் உங் சிவாய ஓம்" என்னும் மந்திரம் உச்சரிக்க விசுத்தியினைக் காணலாம்.

"சிங் கங் சி ங் சிவாய" என்னும் மந்திரத்தால் ஆக்கினையினைக் காணலாம்.

சர்வம் சிவார்ப்பணம்


எதுவும் எனக்கு இல்லை இறைவா எல்லாம் உமக்கே.

No comments:

Post a Comment