Sunday, March 21, 2021

 (தெரிந்து கொள்ளலாமா?..)

(தர்ம சாஸ்திரம்..);

(ஆசிரியர் − திரு. V. ராஜகோபால கனபாடிகள்..)

(பகுதி −17..)

231. ஒரு குழந்தையின் ஜனனம் நிகழும்போது, அந்தக் குழந்தையின் தகப்பனார், அவருடைய சகோதரர்கள், தந்தை வழி பாட்டன்பாட்டி, குழந்தையின் மூத்த சகோதரர்கள் ஆகியோர் எந்தக் கோவிலுக்குள்ளும் பத்து தினங்களுக்கு நுழையக் கூடாது.

232. கோயில்களில் த்வஜஸ்தம்பத்தின் முன்னர் மட்டுமே நமஸ்கரிக்க வேண்டும். மற்ற இடங்களில் நமஸ்காரம் செய்யக் கூடாது.

233. கோயில்களில் தெய்வத்தைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

234. திருமணமான ஆண்கள், கோயிலில்  பஞ்சகச்சம் அணியாமல் பூஜை செய்யக் கூடாது.

235. சிவன் கோயிலை விட்டு வெளியேறுமுன், கோயிலின் நுழைவாசல் அருகே சிறிது நேரம் அமர்ந்துவிட்டே வெளியேற வேண்டும்.

236. மாலை சுவாமி சந்நிதியில்  விளக்கேற்றிய பிறகு, பசுஞ்சாணி, வரட்டி போன்றவற்றை வாங்கவோ, விற்கவோ கூடாது.

237. ப்ரதமை திதியில்  ஒரு வித்தையைக் கற்க ஆரம்பிப்பதையோ, ஒரு தொழில் தொடங்குவதையோ செய்யக் கூடாது.

238. தலைமுடி திருத்துதல், முகச்சவரம் போன்றவற்றை சூரிய உதயத்திற்கு முன்பும், மதியம் ஒரு மணிக்குப் பின்பும் செய்யக் கூடாது.

239. புது வீடு கட்ட ஆரம்பிப்பதையோ, பழைய வீட்டைப் புதுப்பிப்பதையோ, சனி,  செவ்வாய்க் கிழமைகளில் செய்யக் கூடாது.

240. வீடு கட்ட ஆரம்பிப்பதையும், க்ருஹப் பிரவேசத்தையும் அக்னி நட்சத்திர காலத்தில் (28 நாட்கள்) செய்யக் கூடாது.

241. திருமணமான பெண்ணை, நம் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அனுப்பி வைக்கக் கூடாது.

242. மரண யோகத்தில் அனைத்து சுபகாரியங்களையும் விலக்க வேண்டும்.

243. இறந்த வீட்டிற்கு, துக்கம் விசாரிக்க, இறந்ததிலிருந்து வருகின்ற ஒன்பதாம் நாள் செல்லக் கூடாது.

244. ருத்ர ஏகாதசிக்குரிய ஜப ஹோமங்களை மாலை, இரவு நேரங்களில் செய்யக் கூடாது.

245. மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களிலும் சுபகாரியங்களை விலக்க வேண்டும்.

246. வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக் கூடாது.

247. சபரி மலைக்கு விரதம் இருந்து செல்பவர்களை, அவர்களது பெயரிட்டு அழைக்கக் கூடாது.

அவர்களை "ஸ்வாமி" அல்லது "ஐயப்ப ஸ்வாமி" என்றே அழைக்க வேண்டும்..

248.  சாவி, பூட்டு ஆகியவற்றை நேரடியாக ஒருவர் கையில் கொடுக்கவும் கூடாது. ஒருவரிடமிருந்து நேரடியாக வாங்கவும் கூடாது. (இரும்பை நேரடியாக வாங்குவதும், கொடுப்பதும் அமைதியின்மையை உண்டாக்கும்.)

249. வீட்டு வாயிற்படிக்கு உட்பக்கம் நின்றுகொண்டு, வாயிற்படிக்கு வெளியே இருப்பவரிடம் எதையும் கொடுக்கக்கூடாது. அவர்களை வீட்டுக்கு உள்ளே வரவழைத்தோ அல்லது நாம் வாயிற்படியைத் தாண்டியோ சென்றுதான் கொடுக்க வேண்டும்.

250. இடது கையால் எந்தப் பொருளையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது.

(வளரும்..)

(தெரிந்து கொள்ளலாமா?..)

(பகுதி −19..)

266. வெண்பட்டு, நார்மடி போன்றவற்றை தண்ணீரில் அலசக்கூடாது. 

அவற்றின் மேல் சிறிது நீரைத் தெளித்து, சூரிய வெளிச்சத்தில் உலர்த்தி எடுக்க வேண்டும்.

267. விதவிதமான வர்ணங்களில் கோடுகள் போடப்பட்டுள்ள வேஷ்டியை பூஜை, அபிஷேகம், ஜபம், ஹோமம் ஆகியவை செய்யும்போது பயன்படுத்தக் கூடாது.

268. நீரின் சூட்டை அறிந்துகொள்ள, கையை நீரினுள் விடக்கூடாது. சிறிது நீரை எடுத்து உள்ளங்கையில் விட்டு நீரின் சூட்டை அறியலாம்.

இல்லையேல் நீருள்ள பாத்திரத்தைத் தொட்டுப்பார்த்து அறியலாம்.

269. உந்தி (Navel point) தெரிவதுபோல பஞ்சகச்சம் அணியக்கூடாது.

270. கல்யாணங்களிலும், விசேஷங்களிலும் கருப்பு நிற புடவை, வேஷ்டி ஆகியவற்றை அடுத்தவர்க்கு வைத்துக் கொடுக்கக் கூடாது.

271. பந்தியில் நிறைய பேர் அமர்ந்திருக்கும்போது, ஒருவரை மட்டும் விசேஷமாகக் கவனிக்கக் கூடாது. அனைவரையும் சமமாகவே பாவிக்க வேண்டும்.

272. ஈர ஆடையுடன் உணவருந்தக் கூடாது.

273. ஆவணி அவிட்டத்தன்று காலையில் சிற்றுண்டி (tiffin) சாப்பிடக் கூடாது.

274. சுவையான உணவுகளை முதலில் அடுத்தவர்க்குக் கொடுத்துவிட்டே, தான் சாப்பிட வேண்டும்..

275. கிரகணத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடக் கூடாது.

276. சாதத்தை உருட்டி உருட்டி வாயில் போட்டுக் கொள்ளக் கூடாது.

277. முடிதிருத்தம் செய்துகொள்வதற்கு முன் உணவருந்தக் கூடாது.

278. காரடையான் நோன்பு செய்வதற்கு முன் மோர் சாப்பிடக் கூடாது.

279. வாழை இலையில் சாப்பிடும்போது, நுனி சிறுத்த பகுதி சாப்பிடுபவரின் இடது பக்கம் இருக்க வேண்டும்.

280. கிரகணத்தின் போது நாமும் சாப்பிடக் கூடாது. அடுத்தவர்க்கும் உணவளிக்கக் கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment