Friday, March 5, 2021

 

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் வாழை இலை.


நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை.

விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.

சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது தாண்டி, இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் கெடாமலும், மணமாகவும். இருக்கும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி-யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து புண் மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு கட்டி வந்தால் புண் குணமாகும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

சொரியாசிஸ், தோல் அழற்சி மற்றும் கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையைக் கட்டி வைத்தால் விரைவில் குணமாகும்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல்நலம் பெறும்.

மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழை இலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

No comments:

Post a Comment