Monday, March 22, 2021

 *🌹மலரும் நினைவுகள்🌹*


*❤️இன்றைய சிந்தனை..*

*( 14.09.2018 )..*

.............................................

*'' மனதில் இருக்கட்டும் மகிழ்ச்சி..''*

.............................................


நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை நாம் முறையாகக் கையாள்கிறோமா என்பது தான், முக்கியமான கேள்வி. 


அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.


ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை,பலரின் வாழ்வில் காண முடிகிறது. 


குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மைப் பற்றி தவறாகப் பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறோம்.


குப்பைத் தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டு இருந்தால் என்னவாகும்? துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா. 


அதுபோலத் தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியைத் தான் எதிர்பார்க்கிறது. 


ஒருவர், உங்களைப் பாராட்டினாலும்,குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். 


பாராட்டும் போது பறப்பதும், குறை சொல்லும் போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.


யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் புறம் பேசி இருந்தால், உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும். 


அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்கு சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்து கொண்டு இருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள்.


அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதைத் தவிர்த்து விடுங்கள். 


ஒவ்வொருவருக்கு உள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது. 


இதைக் கண்டுபிடித்து, அதன் வழியில் பயணிக்கும் போது, இன்று கிடைக்கா விட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும். 


ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை. வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இதுதான்.எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும்.


ஆம்.,நண்பர்களே.,


‘மகிழ்ச்சி, அமைதியைத் தேடி பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.,


மகிழ்ச்சி, அமைதி உங்களுக்குள்ளே தான் இருக்கிறது..


ஆம்.,நமக்குள் தான் எல்லோமே இருக்கிறது. நமக்குள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு வெளியே தேடி அலைய வேண்டாம்..

********************************************************************************

எதிர்மறை சக்திகள் அகற்ற உதவும் உப்பு:


  உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்


ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது

ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது.


தினமும் உப்புத் தண்ணீரால்  வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்படுகிறது. 


ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்  துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.


கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /  கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.


உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.


No comments:

Post a Comment