Tuesday, March 9, 2021


 மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய 6 பாடங்கள்..

.............................................

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,கொக்கிடம் இருந்து இரண்டையும்,கழுதையிடம் இருந்து மூன்றையும்,

கோழியிடம் இருந்து நான்கையும்,காக்கையிடம் இருந்து ஐந்தையும்,நாயிடம் இருந்து ஆறையும்..,நாம் கற்று கொள்ள வேண்டும்.

1..சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்யாது,நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 .கொக்கு ஓடுமீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம்,தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3..கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை...

4 .விடியற் காலை எழுதல், தைரியமாக சண்டை இடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை.. 

5 .இரவில் குடும்பத்துடன் சேர்ந்து இருத்தல்,

தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,

யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை. .

6 .கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,

உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,

நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்..

ஆம்.,நண்பர்களே..,

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த ஆறு வழி முறைகளை கடைபிடிக்கிறார்களோ, அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த செயலில் அனைத்தும் வெற்றியும் பெறுவார்கள்...

No comments:

Post a Comment