Monday, March 22, 2021

தினமும் இந்த சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்!


ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த  தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.


 

சிவ மந்திரம்:

 

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

 

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

 

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ  தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்...!🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

 


🕉 ஓம் நமசிவாய 


"காசி" நகரம் இந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக ஆனது எதனால்..?


காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற., நினைப்பதற்கே அரிய ஓர் சிவ-சக்தி யந்திரம்.


வருஷத்தின் எல்லா நாட்களும்., ஒரு நாளின் எல்லா மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவசக்தி நிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.


அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.


இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள்., 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.


நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.

இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.

மீதம் இருக்கும் 112ல்., 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.

மற்ற 108ம் சரியாய் இருந்தால்., இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.

இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை)., 54 ஈடா (பெண் தன்மை).

அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன்., மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (Geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான., அற்புதமான வடிவமைப்பு.

பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும்., அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.

இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.

முழு உயிரோட்டத்தில்., முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால்., அதுவே பிரபஞ்சத்தை அவணிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழ முடிந்தால்., பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால்., எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?

468 கோவில்களில்., 108 போக., மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள்.,

64 யோகினி கோவில்கள்.,

12 சூரியன் கோவில்கள்.,

9 நவதுர்கை கோவில்கள்.,

9 சண்டி கோவில்களும் அடங்கும்.

இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில்., 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால்., இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.


அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.


இப்படி படைப்பை உற்று நோக்கி., ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன்., சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது., அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால்., அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து., அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால்., சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.

இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.

அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.

அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும்., அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால்., அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.

அக்காலத்தில்., இந்தப் பூஜை ஒரே நேரத்தில்., காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.

இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.

இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது., நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

இதை நாம் கவனித்துப் பார்த்தால்., எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று., அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்.

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல்., அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.

அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல்., அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய !!🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏


கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு எப்போதெல்லாம் கட்டாயம் இறைவனை வணங்க வேண்டும்? அதன் பலன்கள் என்ன தெரிஞ்சிக்கலாமா


நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம். அன்னத்தில் கையை வைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சாப்பிட்டால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் இன்னும் எந்தெந்த விஷயங்களை நாம் செய்யும் பொழுது கடவுளை வழிபடுவது நல்லது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். உணவு சாப்பிடுவதற்கு முன்பு மட்டுமல்ல! சமைக்கும் பொழுது கூட அன்னபூரணியை வணங்குவது குறைவற்ற செல்வத்தை கொடுக்கும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது அரிசியை போட உலை கொதிக்க வைப்பீர்கள் அல்லவா? அப்போது அரிசியை போடுவதற்கு முன்பு ‘அன்னபூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு போட வேண்டும். இவ்வாறு செய்வதால் அள்ள அள்ள குறையாத அன்னம் சேரும்



வெளியூர் அல்லது வீட்டை விட்டு வெகு தூரம் செல்ல இருக்கிறீர்கள்! திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகும்! என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது வீட்டை பூட்டும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது போல சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் பொழுது இது போல் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மேல் விழும் திருஷ்டிகள் தடுக்கப்படும். பல சமயங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமலேயே போவது உண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளியில் செல்வது என்பதே ஆபத்தான ஒன்று தான். நமக்கு வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து முன்கூட்டியே நம்மை காப்பவர் ‘பைரவர்’ ஆவார். ஆகவே பூட்டை பூட்டும் பொழுது பைரவரை வழிபட்டு செல்வது நல்லது



 நம்முடைய புராணங்களின்படி புண்ணிய நதிகளின் ஆற்றல் அளப்பரியது ஆகும். புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். ஆகவே ஜலம் என்பது புனிதமான ஒரு விஷயமாக இருக்கிறது. நம் வீட்டில் குளிக்கும் பொழுது முதல் தண்ணீரை எடுத்து நம் மீது ஊற்றும் பொழுது, அதனை கங்கா தேவியாகவே பாவித்து ‘ஓம் கங்கா தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து நல்ல ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மனதில் பலவிதமான குழப்பங்கள் சில நேரத்தில் எழும். என்னடா இது வாழ்க்கை? எதற்காக நாம் வாழ பிறந்து இருக்கிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் தேவை இல்லாமல் எழும். ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுடைய பிறப்பிற்கான அர்த்தத்தை தேடி அலைய வேண்டுமே தவிர! ஏன் பிறந்தோம்? என்கிற விரக்தியை உண்டாக்கி கொள்ளக்கூடாது. இது போன்ற சமயத்தில் சாமி படத்திற்கு முன்பு அமைதியாக தியான நிலையில் அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் குழப்பங்கள் அத்தனையும் உடனே தீரும். எல்லா மனிதர்களும் செய்யும் மிகப் பெரிய தவறு கடவுளை கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே நினைத்துக் கொள்வது ஆகும். நல்லது அல்லது மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுதும் கடவுளை நாம் உணர வேண்டும். நல்லது! கெட்டது! எதுவாக இருந்தாலும் நம்மை சுற்றியிருக்கும் போலியான மனிதர்களிடம் கூறுவதைக் காட்டிலும், நம்மை படைத்த இறைவனிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தால் வாழ்வில் என்றுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இப்படி நாம் செய்யும் முக்கியமான ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை வேண்டி வணங்கினால் தோல்வி என்பதே நமக்கு ஏற்படாது என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்



 🙏 திருச்சிற்றம்பலம்🙏



இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி கூட, ஒரே ஒரு நாளில் ராசியாக ஒற்றுமையாக மாறிவிடுவார்கள். 



சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள் உறவு என்பது சுமூகமாக இருக்கவே இருக்காது. அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு, அந்த குழந்தையின் மனசு நொந்து போகும் அளவிற்கு இவர்களது சண்டை இருக்கும். இதன் மூலம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுடைய நிம்மதியும் கெட்டுப்போகும். கணவன்-மனைவிக்குள் சண்டை வராமல் இருக்காது. நிச்சயமாக சண்டை என்ற ஒன்று குடும்பத்தில் இருந்தால் தான் இல்லற வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே இல்லற வாழ்க்கையாக அமைந்து விட்டால் அது சலிப்பு தட்டி விடும். ஏன் தான் திருமணம் செய்தோம் என்ற எண்ணத்திற்கு கொண்டு போய்விடும். சரி, வீட்டிலிருக்கும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் விரிசல் சில நாட்களிலேயே சரியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 


 மனைவி கணவனுடன் சண்டை வரக்கூடாது என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் நாரை வைத்து நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். தூபம் போட எப்படி நெருப்பை மூட்டுவோம் அப்படிதான். அந்த நெருப்பு அப்படியே இருக்கட்டும். மனைவி சாப்பிடும் போது தன்னுடைய தட்டில் சாதத்தை போட்டுக்கொள்ள வேண்டும். சாதத்தை எச்சில் செய்வதற்கு முன்பாகவே ஒரு பிடி சாதத்தை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விட வேண்டும். நிறைய சாதம் எடுக்க வேண்டாம். ஒரு சிறிய ஸ்பூன் அளவு சாதத்தை எடுத்து தனியாக வைத்தால் போதும்.



 சாப்பிட்டு முடித்த பின்பு, தனியாக எடுத்து வைத்த அந்த சாதத்தை, தூபக்காலில் தயாராக இருக்கும் நெருப்பில் போட்டு விட்டு, அந்த நெருப்பில் கொஞ்சமாக காய்ச்சாத பச்சை பாலில் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி விடுங்கள். பரிகாரம் அவ்வளவுதான். சாப்பிடும்போது எடுத்து வைத்திருக்கும் அந்த சாப்பாட்டை முதலில் நெருப்பில் போட்டு விட்டு, அதன் பின்பு அதை சாந்தப்படுத்த பசும்பாலை அந்த நெருப்பில் ஊற்றி விட்டோம். மதியம் சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இப்படி செய்தால் கணவன் மனைவி விரிசல் சரியாகிவிடுமா என்ன? நீங்களும் இதை சோதித்து தான் பாருங்களேன். பரிகாரத்திற்கு பயன்படுத்திய அந்த நெருப்பை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பலன் அளித்தால் நிச்சயமாக குடும்பத்தில் நிம்மதி நிலவும். சந்தோஷம் இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு விடிவு காலமும் பிறந்துவிடும். இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் தானே நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment