Friday, June 15, 2018

வெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வழிகள்!

* அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்

* தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.

* ஒரு கொத்து கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்க வேண்டும். இந்த முறை வாரம் 2 முறை பயனளிக்கும்.

* தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்

* ஒரு இரும்பு வாணலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். இந்த எண்ணெயை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

Thursday, June 14, 2018

நீங்க.. ஏன் இதை பயன்படுத்தக்கூடாது ! மருத்துவக் குறிப்புகள் !

                          படித்தில் பிடித்தது

👉 விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களின் மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
 
👉 சாம்பிராணி, மஞ்சள், சர்க்கரை ஆகியவற்றை போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
 
👉 நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும், கொப்பளமும் ஏற்படாது.
 
👉 வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மேலும், இது மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.
 
👉 அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
 
👉 ஒரு தேக்கரண்டியளவு சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து, வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
 
👉 சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலி நீங்கும்.
 
👉 புடலங்காயின் இலைச்சாற்றை, காலையில் குழந்தைகளுக்கு தந்தால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காயை சமைத்து உண்பதால் உடல் பருமன் குறையும்.
 
👉 கேரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி நிற்கும், உடல் வலுவாகும் மற்றும் பித்த நோய்கள் தீரும்.
 
👉 பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
 
👉 சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
 
👉 முட்டைக்கோஸ் உடன் பசுவின் வெண்ணெயை கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி சரியாகும்.
 
👉 பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
 
👉 பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.