Friday, March 5, 2021



**அபிஷேகப்* *பலன்கள்* 


 *சிவராத்திரியன்றும்* , *பிரதோஷ* *காலங்களிலும்* *சிவனுக்கு* *அபிஷேகம்* *செய்வது விசேஷமான ஒன்றாகும்.பால், நெய், தேன்,* *சந்தனம்* , தயிர், நல்லெண்ணய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு.


 *1* . சிவபெருமானுக்குத் தயிரால் அபிஷேகம் செய்ய குழந்தை வரம் கிட்டும்.


 *2* . சந்தனத்தால் அபிஷேகம் செய்ய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.


 *3* . கடன் தொல்லைகள் தீர அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம்.


 *4* . வேலை வாய்ப்பு அமைய சிவனுக்கு விபூதி அபிஷேகம்.


 *5* . சர்க்கரை அபிஷேகம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும்


 *6* . குடும்ப நலன் காக்க ஐயனுக்கு இளநீரால் அபிஷேகம்.


 *7* . மரண பயம் நீங்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்யலாம்.


 *8* . ஆரோக்கியம் காக்க பாலால் அபிஷேகம் செய்யலாம்.


 *9* . சகல ஐஸ்வர்யம் கிட்டப் பஞ்சாமிர்த அபிஷேகம்.


 *10* . வாழ்வில் முக்தி கிட்ட நெய் அபிஷேகம்.

முறையான வழிபாட்டை முடித்து *சிவபெருமானின் இணையில்லா அருளைப் பெறுங்கள்*🌹

  🌹ஓம்  நமசிவாய🌹

 

No comments:

Post a Comment