Thursday, March 18, 2021

 ##குருவின் திருவருளால்##

*வாழ்வை வளப்படுத்தும் பதினாறு வகையான  சிந்தனைகள்*

---------------------------

⚜️

*1]* எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். 

நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

*2]* ☀️ *தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.

[இது எனக்கு பிடித்த முதல் சிந்தனை-உங்களுக்கு...?]

⚜️

*3]* உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

*4]* ☀️குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாகப் பழகிப் பாருங்கள். நாம் முன்னர் (சிறுவயதில்) எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும். 

*5]* வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் (முதுமையில்) என்பது முழுமையாகப் புரியும்.

*6]*  ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய்* இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

*7]* ☀️சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

*8]* வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள். யார் யார் உண்மையான நண்பர்கள் என்று...? 

[இது எனக்கு பிடித்த இரண்டாவது சிந்தனை-உங்களுக்கு...?]

*9]* ☀️ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம். 

⚜️

*10]* நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் (ஊருக்கே) பிடிக்கும்.

*11]* ☀️அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

*12]* ⚜️வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

*13]* ☀️எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

*14]*⚜️நங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு  

*நம்பிக்கையை* என்பதே சரி.

*15]* ☀️அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

*16]* ⚜️மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 

அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருவது....!

##திருச்சிற்றம்பலம்##

No comments:

Post a Comment