Tuesday, March 30, 2021

 *முருகனின் அபூர்வ ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்..*


சகல ஜன வசீகரமாம் *சஹாரத்தாலே*

தனமுதல் அழைத்து வரும் *ரஹாரத்தாலே*

பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் *ஹகாரத்தாலே*

பகைத்தவரைக் கொல்ல வைக்கும் *ணகாரத்தாலே*

சகலமுமே மோஹிக்கும் *பகாரத்தாலே*

சகலரையும் ஸ்தம்பிக்கும் *வகாரத்தாலே*

அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.


மேற்கண்ட மந்திரம் *அகஸ்தியர்* அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.


*ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-*


1. *சரஹணபவ* - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.


2. *ரஹணபவச* - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.


3. *ஹணபவசர* - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.


4. *ணபவசரஹ* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.


5. *பவசரஹண* - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.


6. *வசரஹணப* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

No comments:

Post a Comment