Tuesday, March 30, 2021

உருவாய் அருவாய் உளதாய்  இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இந்தப் பாடலை என் வாழ்வில்  சிறுவயது முதல் பலமுறை படித்து இருக்கிறேன் பல முறை கேட்டும் இருக்கிறேன். அடடா என்னமா எழுதி இருக்கிறார் ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கிறேன்

இத்தனை வருடம் ஆனது அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் பொருளை நான் உணர்ந்து கொள்ள.....

முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம் அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்.

பொருள் / கருத்து.

உருவாய் = உருவத்துடன்

அருவாய் = உருவம் இல்லாமல்

உளதாய் = இருக்கக் கூடியதாய்

இலதாய் = இல்லாததாய்

மருவாய்  = மலரின் வாசமாக

மலராய் = மலராக

மணியாய் = மணியாக

ஒளியாய் = மணியில் இருந்து வரும் ஒளியாக

கருவாய்  = கருவாக

உயிராய்  =உயிராக

கதியாய் =  வழியாக  

விதியாய் = விதியாக

குருவாய் = குரு வடிவில்

வருவாய் = வருவாய்

அருள்வாய் = அருள் செய்வாய்

குகனே = முருகா

கடினமான சொல் ஒன்றும் இல்லை.

இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?

"குருவாய் வருவாய்"

நாம் இறைவனை உண்மையை தேடி அலைகிறோம்  நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம் பலர் சொல்வதைக் கேட்கிறோம் நமக்கு இவர் தான் குரு ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம் துறவிகள் சாமியார்கள் உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்  இப்போதெல்லாம் youtube வந்து விட்டது வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்

இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை அது ஒரு பாட்டுக்கு போகிறது வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது

#அருணகிரிநாதர் சொல்கிறார்

"நீ குருவை தேடி அலையாதே  குரு உன்னைத் தேடி வருவார் நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் "The teacher will appear when the student is ready" என்று

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல உங்களுக்கு எப்படித் தெரியும் அவர் தான் குரு என்று?

"வருவாய்" அவனே வருவான்.

வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?

'கதியாய் விதியாய்"

"உன் விதிப்படி அவன் வருவான் உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ  அப்போது வருவான் வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "

சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?

எனக்கு எத்தனையோ குரு மார்கள் பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர் வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர் வழி கட்டியவர்கள் சிலர் அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்

புரியலையே !

"உருவாய்"

அவன் மானிட உருவில் வருவான்

"அருவாய்"

உருவம் இல்லாமல் வருவான் அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?

ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள் நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள் நல்ல எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது சே இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே.. இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா.... அந்த எழுத்துதான் உங்கள் குரு அதற்கு மானுட வடிவம் இல்லை ஒளி வடிவம் ஒலி வடிவில் வந்து அருள் தருவான்

mp3 file, youtube வீடியோ,search Engine  என்று ஏதோ ஒரு வழியில் அருவமாக வந்து அருள் தருவான்

மருவாய், மலராய்

மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ  அது போல ஆள் தெரியாது எங்கிருந்து எப்படி வருகிறது என்று தெரியாது  அவன் அருள் வந்து சேரும்

மணியாய் ஒளியாய்

மணி தெரியும் அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும் அது ஆடுவது தெரியும் ஒலி தெரியுமா காதில் வந்து விழும்  ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு வாக்கியம் 

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"

என்று ஒரு வாக்கியம் பட்டினத்தாரை மாற்றிப் போட்டது

அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு

அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால் சரி வராட்டி போகட்டும் அதனால் என்ன என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது  ஒரு வாக்கியம் அருள் செய்தது

"அருள்வாய் குகனே"

அது அருள்தான்  காசு கொடுத்து வாங்க முடியாது வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது அந்த அருள் grace வர வேண்டும்

அவனே அருள்வான்

ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.

திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.

என்ன சொல்லுவது?

யார் குரு என்று எப்படி அறிவது?

ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.

சங்கரர் அறிந்தார் இல்லை.

அவர் பாடே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம்?

மாணிக்க வாசகருக்கு அருள் புரிய குருந்த மரத்தடியில்  ஈசர் காத்து கிடந்தார்...

அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.

அவன் வந்தால்தான் உண்டு நாம் போய் கண்டு பிடிக்க முடியாது

மனம் பக்குவப் பட வேண்டும்.

நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம் அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்.... உண்மையான குரு அவர் உங்களைத் தேடி வருவார்.

ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

ஆலவாய் அரசனே போற்றி போற்றி 🙏🙏🙏

 

 *முருகனின் அபூர்வ ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்..*


சகல ஜன வசீகரமாம் *சஹாரத்தாலே*

தனமுதல் அழைத்து வரும் *ரஹாரத்தாலே*

பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் *ஹகாரத்தாலே*

பகைத்தவரைக் கொல்ல வைக்கும் *ணகாரத்தாலே*

சகலமுமே மோஹிக்கும் *பகாரத்தாலே*

சகலரையும் ஸ்தம்பிக்கும் *வகாரத்தாலே*

அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.


மேற்கண்ட மந்திரம் *அகஸ்தியர்* அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.


*ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-*


1. *சரஹணபவ* - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.


2. *ரஹணபவச* - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.


3. *ஹணபவசர* - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.


4. *ணபவசரஹ* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.


5. *பவசரஹண* - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.


6. *வசரஹணப* - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.


 🕉️ஸரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். {தமிழ் விளக்கத்துடன்}

அனைவரும் பொருள் உணர்ந்து படிக்கவே பொருளுடன் வெளியிட்டு உள்ளோம்.🙏

1.       ஓம் ஸ்கந்தாய நம: - {மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.

2.       ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

3.       ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

4.       ஓம் பாலநேத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.

5.       ஓம் பிரபவே நம: - அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

6.       ஓம் பிங்களாய நம: - பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

7.       ஓம் க்ருத்திகாஸூநவே நம: - கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.

8.       ஓம் சிகி வாஹநாய நம: - மயிலை வாகனமாக உடையவர்.

9.       ஓம் த்விஷட்புஜாய நம: - பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.

10.   ஓம் த்விஷண்ணேத்ராய நம: - பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.

11.   ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.

12.   ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: - பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.

13.   ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: - தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.

14.   ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: - ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.

15.   ஓம் மத்தாய நமஹ: - மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.

16.   ஓம் ப்ரமத்தனாய நமஹ: - மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.{தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.

17.   ஓம் உன்மத்தாய நமஹ: - தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.}

18.   ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: - தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.

19.   ஓம் தேவசேனாபதயே நமஹ: - தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.

20.   ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: - ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.

21.   ஓம் கிருபானவே நமஹ: - பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.

22.   ஓம் பக்தவத்ஸலாய நமஹ: - பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.

23.   ஓம் உமாஸுதாய நமஹ: - உமாதேவியின் புதல்வர்.

24.   ஓம் சக்திதராய நமஹ: - சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.

25.   ஓம் குமாராய நமஹ: - சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.

26.   ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: - க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.

27.   ஓம் ஸேனான்யே நமஹ: - தேவர்களின் படைத் தலைவர்.

28.   ஓம் அக்னி ஜன்மனே நமஹ: - அக்கினிச் சுடராக பிறந்தவர்.

29.   ஓம் விசாகாய நமஹ: - விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.

30.   ஓம் சங்கராத்மஜாய நமஹ: - எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.

31.   ஓம் சிவஸ்வாமிநே நமஹ: - தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.

32.   ஓம் கணஸ்வாமிநே நமஹ: - சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.

33.   ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: - ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர். ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.

34.   ஓம் ஸநாதனாய நமஹ: - மிகவும் பழமையானவர்.

35.   ஓம் அனந்த சக்தயே நமஹ: - அளவற்ற ஆற்றல் படைத்தவர்.

36.   ஓம் அக்ஷோப்பியாய நமஹ – விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.}

37.   ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ: - பார்வதியின் அன்புக்குரிய செல்லக் குழந்தை.

38.   ஓம் கங்காஸுதாய நமஹ: - சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.

39.   ஓம் சரோத்பூதாய நமஹ: - சரவணப் பொய்கையில் பிறந்தவர்.

40.   ஓம் ஆஹுதாய நமஹ: - யாகங்களால் போற்றப்படுபவர்.

41.   ஓம் பாவகாத்மஜாய நமஹ: - அக்கினியின் புத்திரர்.

42.   ஓம் ஜ்ரும்பாய நமஹ: - எங்கும் நிறைந்திருப்பவர்.

43.   ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.

44.   ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.

45.   ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: - தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.

46.   ஓம் ஏக வர்ணாய நமஹ: - ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.

47.   ஓம் த்விவர்ணாய நமஹ: - சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.

48.   ஓம் த்ரிவர்ணாய நமஹ: - சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

49.   ஓம் ஸுமனோஹராய நமஹ: - அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.

50.   ஓம் சதுர் வர்ணாய நமஹ: - மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.

51.   ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: - பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.

52.   ஓம் ப்ரஜாபதயே நமஹ: - உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.

53.   ஓம் அஹஸ்பதயே நமஹ: - பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.

54.   ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: - அக்னியில் பிறந்தவர்.

55.   ஓம் சமீ கர்ப்பாய நமஹ: - எரியும் கட்டையிலிருந்து நெருப்புப் பொறிகள் கிளம்புவது போல் சிவனின் கண்களிலிருந்து கிளம்பிய பொறிகளிலிருந்து தோன்றியவர்.

56.   ஓம் விஸ்வ ரேதஸே நமஹ: - உலகத்திற்கு வித்தாகிய பரம்பொருள்.

57.   ஓம் ஸுராரிக்னே நமஹ: - தேவர்களின் பகைவர்களை அழிப்பவர்.

58.   ஓம் ஹரித்வர்ணாய நமஹ: - மஞ்சள் நிறமாகவும் பொன்னிறமாகவும் காணப்படுபவர்.

59.   ஓம் சுபகராய நமஹ: - பக்தர்களுக்கு நன்மையே செய்பவர்.

60.   ஓம் வடவே நமஹ: - பிரம்மசாரி விரதம் பூண்டு ஆண்டியானவர்.

61.   ஓம் படுவேஷப்ருதே நமஹ: - எதிரிகளிடம் மிகவும் கொடுமையானவர் போல் நடிப்பவர்.

62.   ஓம் பூஷ்ணே நமஹ: - எல்லோரையும் பாதுகாப்பவர்.

63.   ஓம் கபஸ்தயே நமஹ: - ஒளி வீசும் சூரியன் போல் பிரகாசிப்பவர்.

64.   ஓம் கஹானாய நமஹ: - மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.

65.   ஓம் சந்திர வர்ணாய நமஹ: - பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.

66.   ஓம் கலாதராய நமஹ: - சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.

67.   ஓம் மாயாதராய நமஹ: - மாயையை அடக்கியாள்பவர்.

68.   ஓம் மஹாமாயினே நமஹ: - பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.

69.   ஓம் கைவல்யாய நமஹ: - ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.

70.   ஓம் சங்கராத்மஜாய நமஹ: - பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.

71.   ஓம் விஸ்வ யோனயே நமஹ: உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.

72.   ஓம் அமேயாத்மனே நமஹ: - அளவிட இயலாத மகிமையுள்ளவர்.

73.   ஓம் தேஜோ நிதயே நமஹ; - ஒளியின் பொக்கிஷம் என்று சொல்லும் வகையில் ஒளி பொருந்தியவர்.

74.   ஓம் அனாமயாய நமஹ: - வினைப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் நோய்களால் பீடிக்கப் படாதவர் பிறவிப்பிணி இல்லாதவர்.

75.   ஓம் பரமேஷ்டினே நமஹ: - தந்தைக்குப் பிரணவ உபதேசம் செய்த ஆச்சாரியனாக இருந்தவர்.

76.   ஓம் பரப்ரஹ்மணே நமஹ: - பரம்பொருளாக இருப்பவர்.

77.   ஓம் வேத கர்ப்பாய நமஹ: - வேதங்களின் தலைவர்.

78.   ஓம் விராட்ஸுதாய நமஹ: - விராட் சொரூபமான பரமேஸ்வரினனின் புதல்வன்.

79.   ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ: - வேடன் மகளான வள்ளி தேவியின் கணவர்.

80.   ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: - அழகாகவும்,இனிமையாகவும் பேசுவதயே விரதமாக இருப்பவர்.

81.   ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ: - தன்னைச் சரணைந்தடைவர்களுக்கு எல்லா நலங்களையும் வழங்குபவர்.

82.   ஓம் சோரக்னாய நமஹ: - பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.

83.   ஓம் ரோக நாசனாய நமஹ: - விலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெறிய வியாதிகளையும் நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.

84.   ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: - இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.

85.   ஓம் ஆனந்தாய நமஹ: - ஆனந்தமே வடிவானவர்

.86.   ஓம் சிகண்டினே நமஹ: - சேவற்கொடி உடையவர்

.

87.   ஓம் டம்பாய நமஹ: - {குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.

88.   ஓம் பரம டம்பாய நமஹ: - எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.

89.   ஓம் மஹா டம்பாய நமஹ: - மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறமையும் கொண்டு போர் செய்பவர்.

90.   ஓம் விருஷாகபயே நமஹ: - எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.

91.   ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: - மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.

92.   ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: - காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.

93.   ஓம் அநீஸ்வராய நமஹ: - தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.

94.   ஓம் அம்ருதாய நமஹ: - அழிவற்றவர்.

95.   ஓம் ப்ராயணாய நமஹ: - எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.

96.   ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: - ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.

97.   ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: - விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.

98.   ஓம் வீரக்னாய நமஹ: - சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.

99.   ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: - கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.

100.   ஓம் சுப்ரமண்யாய நமஹ: - சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.

101.   ஓம் குஹாய நமஹ: - மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.

102.   ஓம் ப்ரீதாய நமஹ: - பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவர்

103.   ஓம் ப்ரம்மண்யாய நமஹ: - தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.

104.   ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: - ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.

105.   ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: - பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.

106.   ஓம் வேத வேத்யாய நமஹ: - எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.

107.   ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: - பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.

108.   ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: - வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.

🙏🙏🙏🙏🙏

 

*🔯🚩கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம்🚩🔯* 

 🌺🌿கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் . 

🌺🌿கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும். 

🌺🌿முருக கவச பாடல்: 

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!! மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு. 

‘🌺🌿ஓம் சரவணபவ’ என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை.

 🌺🌿இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது. 

🌺🌿இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை. 

🌺🌿கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை!

 🌺🌿இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும். ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.

 🌺🌿முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள், நல்லதே நடக்கும். 

ஓம் சரவண பவ 🌺🙏🏻🌺

முருகா சரணம் 🌺🙏🏻🌺


 *#பஞ்ச_நாமங்கள்*

எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என கடவுள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிராறாம்.

       திருமாலின் பஞ்ச நாமங்கள் 5                   

                        1வது நாமம்

                             ""ராமா""

                            ~~~

ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள்.

மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள்

"ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்"

பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடிமந்திரங்கள் சொன்னபலனாம்!

                          2வது நாமம்....

                           ""க்ருஷ்ணா""

                        ~~~~~~,,~

இந்த நாமமே பாண்டவர்களைக்  கூடவே இருந்து காத்தது.....குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!

எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........

கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்கொடுக்கும் ,நாமம்........

                          3வது நாமம்

                        "நாராயணா""

                       ~~~~,,~

சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.

எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு பிடித்த குழந்தை அவன்..... 

ஆண்டாள் தன்,பாசுரத்தில்"நாராயணனே நமக்கே பறை,தருவான்...என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.

                          4வது நாமம்

                          "கோவிந்தா"

                         ~~~~~

துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....

" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......

                           5வது நாமம்...

                            "நரஸிம்மா"

                           ~~~~~

 பக்தர்கள்கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே

தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....

" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்."ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே

இல்லையாம்.....அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....

அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்

"நாரஸிம்ஹ"வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:

என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.....

ராமா! கிருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம்.   திருமாலின் இந்த திருநாமங்கள்நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!!

 *கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.* 

--------------------------------------------------------

1. பொருட்படுத்தாதீர்கள். 

----------------------------------

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள். 

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். 

--------------------------------------------------------

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். 

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள். 

-------------------------------------------------------

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை. 

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள். 

-------------------------------------------------------

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.✍🏼🌹

*தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.*

வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.

வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.

வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.

ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.

வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.

பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.

துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.

மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது

கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.

சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.

                   *நம்புங்கள் உங்களை*

 ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய  தமிழ்ச்சித்தர்கள்  வகுத்த தமிழ் தனித்தே சாதரண ஒரு மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற அறிவியற் களஞ்சியம். தோண்டத்தோண்ட வற்றா அறிவருவி. தமிழில் இல்லாதது ஏதுமில்லை.

            தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு:-

தலை முடி கறுக்க:

"எண்ணெய் இட்டு முழுகும் பொது

நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து

அரையப்பா அரைத்து போட்டு முழுகு"

நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.

"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி

யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".

பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

              சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவர், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

               அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.

(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்

பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்

சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

              திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500

2. திருக்குறள் - 1330

3. இரத்தினசிந்தாமணி - 800

4. பஞ்சரத்தனம் - 500

5. கற்பம் - 300

6. நாதாந்த சாரம் - 100

7. நாதாந்த திறவுகோல - 100

8. வைத்திய சூத்திரம் - 100

9. கற்ப குருநூல் - 50

10. முப்பு சூத்திரம் - 30

11. வாத சூத்திரம் - 16

12. முப்புக்குரு - 11

13. கவுன மணி - 100

14. ஏணி ஏற்றம் - 100

15. குருநூல் - 51

ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண்கள்:

 ௧ = 1

 ௨ = 2

 ௩ = 3

 ௪ = 4

 ௫ = 5

 ௬ = 6

 ௭ = 7

 ௮ = 8

 ௯ = 9

 ௰ = 10

 ௰௧ = 11

 ௰௨ = 12

 ௰௩ = 13

 ௰௪ = 14

 ௰௫ = 15

 ௰௬ = 16

 ௰௭ = 17

 ௰௮ = 18

 ௰௯ = 19

 ௨௰ = 20

 ௱ = 100

 ௱௫௰௬ = 156

 ௨௱ = 200

 ௩௱ = 300

 ௲ = 1000

 ௲௧ = 1001

 ௲௪௰ = 1040

 ௮௲ = 8000

 ௰௲ = 10,000

 ௭௰௲ = 70,000

 ௯௰௲ = 90,000

 ௱௲ = 100,000 (lakh)

 ௮௱௲ = 800,000

 ௰௱௲ = 1,000,000 (10 lakhs)

 ௯௰௱௲ = 9,000,000

 ௱௱௲ = 10,000,000 (crore)

 ௰௱௱௲ = 100,000,000 (10 crore)

 ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)

 ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)

 ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)

 ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)

 ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்:


1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred z

Million

1000000000000000000 = அர்த்தம் -

10000000000000000000 = பரார்த்தம் —

100000000000000000000 = பூரியம் -

1000000000000000000000 = முக்கோடி -

10000000000000000000000 = மகாஉகம்

இறங்குமுக எண்கள்:


1 - ஒன்று

3/4 - முக்கால்

1/2 - அரை கால்

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி(வீசம்)

1/20 - ஒருமா

3/64 - முக்கால்வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரைவீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

1/102400 - கீழ்முந்திரி

1/2150400 - இம்மி

1/23654400 - மும்மி

1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001

1/1490227200 - குணம்

1/7451136000 - பந்தம்

1/44706816000 - பாகம்

1/312947712000 - விந்தம்

1/5320111104000 - நாகவிந்தம்

1/74481555456000 - சிந்தை

1/489631109120000 - கதிர்முனை

1/9585244364800000 - குரல்வளைப்படி

1/575114661888000000 - வெள்ளம்

1/57511466188800000000 - நுண்மணல்

1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்:

நீட்டலளவு:

10 கோன் - 1 நுண்ணணு

10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!

8 அணு - 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் - 1 துசும்பு

8 துசும்பு - 1 மயிர்நுணி

8 மயிர்நுணி - 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறுகடுகு

8 சிறுகடுகு - 1 எள்

8 எள் - 1 நெல்

8 நெல் - 1 விரல்

12 விரல் - 1 சாண்

2 சாண் - 1 முழம்

4 முழம் - 1 பாகம்

6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)

4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்:

4 நெல் எடை - 1 குன்றிமணி

2 குன்றிமணி - 1 மஞ்சாடி

2 மஞ்சாடி - 1 பணவெடை

5 பணவெடை - 1 கழஞ்சு

8 பணவெடை - 1 வராகனெடை

4 கழஞ்சு - 1 கஃசு

4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்:

32 குன்றிமணி - 1 வராகனெடை

10 வராகனெடை - 1 பலம்

40 பலம் - 1 வீசை

6 வீசை - 1 தூலாம்

8 வீசை - 1 மணங்கு

20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு:

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு:

300 நெல் - 1 செவிடு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 1 கரிசை

96 படி - 1 கலம்

120 படி - 1 பொதி.

வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!!🙏🙏🙏

 #நோய்_நம்_உடலில்_இல்லை

#அது_நம்_மனதில்தான்_இருக்கிறது

உங்களுக்கே தெரியாத உங்களை பற்றிய சில உளவியல் உண்மைகளை புரிய வைக்கஒரு கதை!!

ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது 

நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .

ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

திடுக்கிட்டு எழுந்தான் .

காதில் இருந்த பூச்சியை எடுக்க

மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள் 

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை

சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன 

 மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். 

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள், ஆனால் யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததால்,

அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை 

உணவு சாப்பிடுவது குறைந்து  

மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,

இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல் காணப்பட்டான் 

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .

பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .

இந்த நேரத்தில் இமய மலையிலிருந்து

ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.

தன் கணவனை எப்படியாவது  காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள் 

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி 

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். 

அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார் 

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,

அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,

தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி 

அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .

கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். 

அது 'ராஜ மூலிகை' என்பதால் 

அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் 

பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது 

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். 

சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி 

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,

பழைய பொலிவு திரும்பி விட்டது 

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் 

உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன் 

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும்

துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் 

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''

மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .

"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .

ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து 

அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால், அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. 

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்  என்றான்

'துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை 

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்,

இல்லை வெளியே வந்திருக்கும் 

அந்தச் சிறிது நேரத்தில் 

அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை

 ஏற்படுத்திவிட்டது .அந்த மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது 

எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் 

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!! 

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் 

பின் ஒருநாள் பூஜை செய்து 

காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு 

ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான் அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை 

நம் மனங்களில் தான் இருக்கின்றன. 

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது 

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா,

நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' 

என்று எத்தனை பேர் ஜம்பமடிக்கிறார்கள் பாருங்கள் 

ஆனால் இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும்,

காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான் .

பிரச்னை நம் பெற்றோரிடமோ, 

நம் ஆசிரியரிடமோ, 

நம் பள்ளி-கல்லூரியிடமோ, 

நம் சூழ்நிலையிலோ இல்லை .

அது நம் மனதில் இருக்கிறது 

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது .

ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில்

மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள் 

ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. 

கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம்நடக்க வேண்டும் .

அதன்படி ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள் 

அந்த அதிகாரி பாவம், தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார் .

பாதி தூரம் கடந்தவுடன் 

"என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார் 

கூட இருந்த மற்ற அதிகார்கள் 

"உன் தலையில வச்ச பேப்பர் வெயிட்ட நீ நடக்க ஆரம்பிக்கும் முன்பே நைசாக  எடுத்துவிட்டோம் .

இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே..!!! 

ஹ ஹ ஹ ஹ ஹா.. என்று சொல்லி சிரித்தார்கள்.

.''இது நகைச்சுவை அல்ல; 

இது நமது இன்றைய வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும் விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்ட 

மன்னனைப் போல...

இல்லாத பிரச்னையை, 

இருப்பதாக நினைத்துக்கொண்டு,

நம்மில் பலபேர் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

                🍒   தேவரகசியம்!   🍒

-------------------------~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🦐 ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். 

                 எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.

இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.

நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள்.

ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை......

கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை......

அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.....

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

🐾 அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,

       "என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும்....  "என்னுடன் வா" என்கிறான்.

எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.

தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

         அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.

அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்.....

அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.

தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.!!

எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம் "இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.

           எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.

ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.

அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.

முதல் நாள் போய்விட்டது.

இரண்டாம் நாள் போய்விட்டது....

தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.

இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.

அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான்.

இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.

        அப்படியே மேலே போவான்..... 

அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.

அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.

"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்பான்.

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?

அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.

பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.

அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.

🍒  #இதுதான் #தேவரகசியம் #ஒன்று! 🍒

மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். 

"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?

அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?

அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.

நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.

           ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது 

🍒 #இரண்டாவது #தேவரகசியம் #புரிந்தது🍒

கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்......

மூன்றாவது #தேவ_ரகசியம்  மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே!!

"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.

அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".

இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!

நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை!

அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் 

         🍒  #மூன்றாவது #ரகசியம்!!  🍒

அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!

இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!

அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!

இந்த மூன்று ரகசியங்கள்..... 

அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.....

இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.

மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.

இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.

இவைதான் அந்த மூன்று #தேவ_ரகசியங்கள் என்பான்.....

எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!! 🍊

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

Monday, March 29, 2021


 சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️21.

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்.

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை

சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்.

கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

பொருள் : -

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு.

அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை,

சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது.

இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது.

அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி.

இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும்.

இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️22.

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்.

செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே

விங்களங்கள் பேசுவோர்.

விளங்குகின்ற மாந்தரே

எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.

பொருள் :-

தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது.

அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள்.

இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது.

நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️23.

அஞ்செழுத்திலே பிறந்து. 

அஞ்செழுத்திலே வளர்ந்து.

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.

அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்.

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

பொருள் :-

ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது.

அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே.

பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து,

அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள்.

நமச்சிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால். 

அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️24.

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே.

பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்.

நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்.

அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே.

பொருள் :-

அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது.

அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது.

இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது.

அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை.

அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.

🙏திருச்சிற்றம்பலம்🙏


Tuesday, March 23, 2021

 💥🌷ஓம் சக்தி ஆதிபராசக்தி🌷💥


*,🌷வட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். எப்பேர்பட்ட

  குல தெய்வ குத்தமும் நீங்கும்.*🌷


🔥*குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்.*

*குலதெய்வமே நமக்கு முதல் தெய்வம்.!🔥


🔷🔶🔹🔹◽️◽️◽️🔹🔹🔶🔷

     

எவ்வளவு பெரிய குல தெய்வ குத்தம் நம்முடைய குடும்பத்திற்கு இருந்தாலும், அதன் மூலம் நமக்கு பேராபத்துகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 


எந்த குலதெய்வமும் தன்னுடைய, பக்தர்களுக்கு கோபத்தால் தண்டனையை கொடுக்காது. ‌அதாவது குல தெய்வம் தன்னை நினைவு படுத்துவற்க்காக, பக்தர்களுக்கு பல சோதனைகளை கொடுக்கும். 


🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️


அந்த சோதனை சமயத்தில் நிச்சயமாக நம்முடைய குல தெய்வத்தை நாம் நினைத்துக் கொள்வோம் அல்லவா? அதற்காகத் தான். குலதெய்வத்தை எவரொருவர் நினைவுகூர்ந்து வழிபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ, அவர்களுடைய வீட்டில் நிச்சயம் கஷ்டமும் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்ற கருத்தை ஆழமாக வைத்து இந்த பதிவினை தொடங்குவோம்.


🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳


நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். 

ஏதாவது ஒரு வகையில் அசுப தீட்டுகள் உங்களை குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல் தடுக்கின்றது என்றாலும், இல்லை நீங்கள் குலதெய்வம் இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் வசிப்பவர்கள் ஆக இருந்தால், வீட்டிலிருந்தபடியே பெண்கள் குலதெய்வத்தை வேண்டி எப்படி பூஜை செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀


குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்து உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தாலும், இந்த பூஜையை நீங்கள் தினசரி உங்களுடைய வீட்டில் செய்யலாம். தவறு கிடையாது. 

முதலில் பச்சரிசியை வாங்கி மாவாக அரைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். கடையில் வாங்கிய பச்சரிசி மாவை பயன்படுத்துவதை விட, நீங்களே அரைத்த பச்சரிசி மாவு பூஜைக்கு உகந்தது.


💢♻️💢♻️🔹🔔🔹♻️💢♻️💢


அடுத்தபடியாக பூஜைக்கு தயாராகுவோம். ஒரு சிறிய தட்டில் பச்சரிசியை பரப்பி, அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றவேண்டும். கட்டாயம் எல்லார் வீட்டு பூஜை அறையிலும் அவரவருடைய குலதெய்வத்தின் திருவுருவப் படம் இருக்கும். 


⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂


குலதெய்வத்தின் திருவுருவப் படம் இல்லாதவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து மஞ்சள் பிடித்து வழிபடலாம்...

தீபத்தின் அருகில் வைத்துவிட்டு அந்த படத்திற்கு முன்பாக, உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை பச்சரிசி மாவால் எழுதவேண்டும். கோலம் போடுவது போல எழுத வேண்டும்.


🔥💥🌟💫❄️🌊❄️💫🌟💥🔥


உங்களுடைய குலதெய்வம் அய்யனார் ஆக இருந்தால், ‘ஓம் அய்யனாரே துணை’ என்று எழுத வேண்டும்.


உங்களுடைய குலதெய்வம் சாஸ்தா ஆக இருந்தால் 'ஓம் குல சாஸ்தாவே துணை' என்று எழுத வேண்டும். 

உங்களுடைய குலதெய்வம் பெருமாளாக இருந்தால் ‘பெருமாள் துணை’ என்று எழுதிக் கொள்ளுங்கள். முருகர் ஆக இருந்தால் ‘முருகனே துணை’ என்று எழுதிக் கொள்ளுங்கள். அம்மனாக இருந்தால் தாயே துணை என்று எழுதிக்கொள்ளுங்கள்...


⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄


இந்து தர்மத்தை பொருத்தவரைக்கும் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கும்.

குலதெய்வமே அனைவருக்கும் முதல் தெய்வம். எனவே அவரவர் குல தெய்வத்தின் பெயர்களை


இப்படி எழுதி விட்டு உங்களுடைய குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு தீப ஆராதனை காட்டி மனதார உங்களது குலதெய்வம், உங்கள் குலத்தை, காக்க வேண்டும், 


அறிந்தும் அறியாமல் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டால் வீட்டில் இருக்கும் தீராத பிரச்சினைகளுக்குக் கூட சீக்கிரமே விடிவுகாலம் பிறந்துவிடும்.


🍎🍏🍋🥥🍇🥭🍑🫐🥭🍇🍓


தினமும் இறைவனின் பெயரை புதியதாக எழுத வேண்டும். பழைய பச்சரிசி மாவை, பூஜை அறையில் இருந்து எடுத்து கால் படாத இடத்தில் ஈ எறும்புகள் சாப்பிட போட்டு விடுங்கள்.


குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பினும், அதனால் பெரிய பாதிப்புகள் உங்களுடைய குடும்பத்திற்கு வராது. 


🌐🌀💠♨️💢♨️💠🌀🌐


உங்கள் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்தால் உங்கள் வீட்டில் இருந்து வரும் தீராத பிரச்சனை, தீராத கலக்கம், தீராத துன்பம், சுபகாரியத் தடைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். 


🟣🔵🟢🟠🟡⚪️🟡🟠🟢🔵🟣


குல தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த பரிகாரத்தை செய்து எல்லோரும் பலனடைய வேண்டும், என்று வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.


🔥💥🌟💫❄️🌊❄️💫🌟💥🔥


*குலதெய்வத்தின் வழிபாடுகள்...*


*மீண்டும் தொடரும்...*✨


🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

      *┈┉┅━❀•━┅┉┈*


⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

*என்றும் இறைபணியில்...*

 துளசி செடியும் இந்த செடியை வைத்தால் வீட்டில் சண்டையே வராது*

9944947804....

✳️வட்டில் நல்ல ஆற்றல்கள் பெருக பசுமையான செடி வகைகளை வளர்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் தெய்வீக செடியாக விளங்கும் துளசி செடியை எல்லோருடைய வீட்டிலும் வளர்த்து வருவது வாடிக்கை.


✳️துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. துளசி செடியை வழிபடுபவர்களுக்கு நிம்மதியும், செல்வமும் எப்போதும் நிறைந்து இருக்கும். 


✳️அவ்வகையில் துளசி செடியுடன் இந்த ஒரு செடியையும் சேர்த்து வளர்த்து வந்தால் வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருகும் என்பது ஐதீகம். துளசியில் கற்பூரவள்ளி என்று கூறப்படும் துளசியையும் வீட்டில் வளர்ப்பது ராஜ யோகத்தை தரும்.


✳️மேலும் தொட்டாசினுங்கி துளசியுடன் சேர்த்து வளர்த்தால் நிறைய நன்மைகள் உண்டாகும். இதனை தனித்தனியாக வளர்த்தாலும், அருகருகே வைத்து வளர்த்து வாருங்கள். நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

 *ம்ருத்யுஞ்ஜய மந்திரம்..!*


மிகவும் சக்தி வாய்ந்த மந்திரத்தையும் அதன் பொருளையும் பலனையும் பார்ப்போம்....


இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும்  யஜூர் வேதத்திலும் காணப்படுகிறது.


இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் !

உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் !!


சொற்பொருள்:-


ஓம் = ஓம்; 

த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்;

சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே; 

உர்வாருகம் = வெள்ளரிப்பழம்; 

இவ = போல; 

ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்;

பந்தனாத் = பிடியிலிருந்து; 

முக்ஷீய = விடுவித்து;

மா = எனக்கு; 

அம்ருதாத் = இறவாமையை அருளும்.


மந்திரத்தின் பொருள்:-


ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.


தீராதநோய், பயம்,கண்டங்கள்,விலக தினம் 108முறை ஜெபிக்க வேண்டும். மிக மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும்.

 கோரோனா ஊசி போடுபவர்கள் /  போட்டுக் கொண்டவர்களின் கவனத்திற்கு

===================================


 மருத்துவரின் அறிவுரை.


1. நடைப்பயணம் / உடற்பயிற்சி  குறைந்தது ஐந்து நாட்களுக்கு கூடாது.


வீட்டில் முழு ஓய்வு தேவை.


2. தடுப்பூசியானது இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டதில் இருந்து இரு வாரம் கழித்தே பயன் தரும்.


எனவே அதுவரை அஜாக்கிரதை யாகவும், இங்கும் அங்கும்  அனாவசியமாக சுற்றுவதும் கூடாது.


ஆகவே இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து  இரு வாரங்கள் மிகக்கவனமாக இருக்கவும். 


சரியான ஓய்வில் இருக்கவும்.


3. இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து மூன்று நாட்கள் வரை காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது.


அப்போதும் உடல்நிலை சரியாக வில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


4  பசி தாகம் இருக்கும் பழச்சாறு தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். எப்போதும் போல் உணவு கொள்ள வேண்டும்..


5. தலை உடல் வலி கொஞ்சம் மக்கத்தன்மை கூட ஓரிரு நாட்கள் இருக்கலாம். அது ஒன்றும் ஆகாது..


எல்லா மூத்த குடிமக்களுக்கும்  இந்தத் தகவல் தெரிய வாய்ப்பில்லை.


எனவே அனைத்து

மூத்த குடிமக்களுக்கும் இந்தத்தகவலை கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

Monday, March 22, 2021


 தினமும் இந்த சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்!


ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த  தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.


 

சிவ மந்திரம்:

 

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

 

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

 

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ  தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்...

 ஒளவையாருக்கும் வள்ளலாருக்கும் என்ன ஒற்றுமை ?மற்றும் வேற்றுமை? என்பதை பற்றிய ஒரு ஆய்வு பதிவு!


இருவரும்  இயற்றிய செய்யுள்களிலிருந்து இதை பதிவிடுகின்றேன்.


ஔவையார் இயற்றிய உலக நீதி செய்யுள். 


ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் 

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 

மாதா¨வை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 

வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம் 


நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் 

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் 

அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம் 

அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் 


மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் 

மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் 

சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம் 

சினந் திருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் 


வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் 

மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் 

மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம் 

முற் கோபக்காரரோடிணங்க வேண்டாம்.


பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த  ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார் பெருமானுக்கு வேண்டாம் என்ற எதிர்மறையான வார்த்தைகளை கூற விரும்பாமல் 'வேண்டும்','வேண்டும்' என ஒரு நேர்மறையான கருத்துக்களை கூறும் பாடலை பாடினார்


இது நடந்தது மிகவும் பழைய காலமல்ல,150 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம்  


பத்து வயது கூட நிறைவடையாமல்   ஒரு சிறிய மாணவனாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வள்ளலார் பெருமானுக்கு பிறவியிலேயே  ஞானம் மிகுதியாக இருந்தது.


ஒரு முறை அவரது ஆசிரியர் மாணவர்களுக்கு  ஔவையாரின் ஆத்திச்சூடியை சொல்லிக்கொடுக்கிறார் 


"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"


மாணவனாக இருந்த வள்ளலார் மட்டும் ஆத்தி சூடியை சொல்ல வில்லை. 


ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது 


"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குற" 


"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா" என்கிறார் வள்ளலார்


ஆசிரியர் திகைத்தார்,அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே, 

சின்னஞ்சிறு பிள்ளையான வள்ளலார் கீழ்கண்டவாறு பாடுகிறார்


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர் தம் உறவு வேண்டும் 


உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 

உறவு கலவாமை வேண்டும் 


பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் 

பொய்மை பேசாதிருக்க வேண்டும் 


பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 


மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் 

உனை மறவாதிருக்க வேண்டும் 


மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 

நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் 


தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் 

தலமோங்கு கந்தவேளே 


தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 

சண்முகத் தெய்வமணியே. 


ஔவையார் 'வேண்டாம்' என எதிர்மறையாகவும்,வள்ளலார் 'வேண்டும்' என நேர்மறையாகவும் என நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள வேற்றுமை!


ஔவையாரும் வள்ளலாரும் நல்ல நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள ஒற்றுமை.


அதைவிட இருவருமே தமிழ்ஞான கடவுளான முருகனின் தரிசனம் பெற்றவர்கள் என்பது இருவருக்குமுள்ள பெரிய ஒற்றுமை.


ஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?எனக்கேட்டு முருகப்பெருமான் தரிசனம் கொடுத்தார்.


வள்ளலாருக்கு முருகப்பெருமான்

கண்ணாடியில் தரிசனம் கொடுத்தார். 


ஔவையார், வள்ளலார் இருவருமே சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முருகப்பெருமானிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது மறுக்க முடியாத ஒற்றுமை!

தினமும் இந்த சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்!


ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த  தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.


 

சிவ மந்திரம்:

 

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

 

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

 

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ  தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்...!🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

 


🕉 ஓம் நமசிவாய 


"காசி" நகரம் இந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக ஆனது எதனால்..?


காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற., நினைப்பதற்கே அரிய ஓர் சிவ-சக்தி யந்திரம்.


வருஷத்தின் எல்லா நாட்களும்., ஒரு நாளின் எல்லா மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவசக்தி நிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.


அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.


இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள்., 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.


நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.

இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.

மீதம் இருக்கும் 112ல்., 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.

மற்ற 108ம் சரியாய் இருந்தால்., இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.

இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை)., 54 ஈடா (பெண் தன்மை).

அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன்., மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (Geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான., அற்புதமான வடிவமைப்பு.

பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும்., அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.

இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.

முழு உயிரோட்டத்தில்., முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால்., அதுவே பிரபஞ்சத்தை அவணிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழ முடிந்தால்., பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால்., எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?

468 கோவில்களில்., 108 போக., மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள்.,

64 யோகினி கோவில்கள்.,

12 சூரியன் கோவில்கள்.,

9 நவதுர்கை கோவில்கள்.,

9 சண்டி கோவில்களும் அடங்கும்.

இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில்., 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால்., இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.


அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.


இப்படி படைப்பை உற்று நோக்கி., ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன்., சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது., அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால்., அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து., அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால்., சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.

இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.

அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.

அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும்., அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால்., அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.

அக்காலத்தில்., இந்தப் பூஜை ஒரே நேரத்தில்., காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.

இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.

இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது., நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

இதை நாம் கவனித்துப் பார்த்தால்., எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று., அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்.

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல்., அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.

அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல்., அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய !!🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏


கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு எப்போதெல்லாம் கட்டாயம் இறைவனை வணங்க வேண்டும்? அதன் பலன்கள் என்ன தெரிஞ்சிக்கலாமா


நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம். அன்னத்தில் கையை வைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சாப்பிட்டால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் இன்னும் எந்தெந்த விஷயங்களை நாம் செய்யும் பொழுது கடவுளை வழிபடுவது நல்லது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். உணவு சாப்பிடுவதற்கு முன்பு மட்டுமல்ல! சமைக்கும் பொழுது கூட அன்னபூரணியை வணங்குவது குறைவற்ற செல்வத்தை கொடுக்கும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது அரிசியை போட உலை கொதிக்க வைப்பீர்கள் அல்லவா? அப்போது அரிசியை போடுவதற்கு முன்பு ‘அன்னபூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு போட வேண்டும். இவ்வாறு செய்வதால் அள்ள அள்ள குறையாத அன்னம் சேரும்



வெளியூர் அல்லது வீட்டை விட்டு வெகு தூரம் செல்ல இருக்கிறீர்கள்! திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகும்! என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது வீட்டை பூட்டும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது போல சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் பொழுது இது போல் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மேல் விழும் திருஷ்டிகள் தடுக்கப்படும். பல சமயங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமலேயே போவது உண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளியில் செல்வது என்பதே ஆபத்தான ஒன்று தான். நமக்கு வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து முன்கூட்டியே நம்மை காப்பவர் ‘பைரவர்’ ஆவார். ஆகவே பூட்டை பூட்டும் பொழுது பைரவரை வழிபட்டு செல்வது நல்லது



 நம்முடைய புராணங்களின்படி புண்ணிய நதிகளின் ஆற்றல் அளப்பரியது ஆகும். புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். ஆகவே ஜலம் என்பது புனிதமான ஒரு விஷயமாக இருக்கிறது. நம் வீட்டில் குளிக்கும் பொழுது முதல் தண்ணீரை எடுத்து நம் மீது ஊற்றும் பொழுது, அதனை கங்கா தேவியாகவே பாவித்து ‘ஓம் கங்கா தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து நல்ல ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மனதில் பலவிதமான குழப்பங்கள் சில நேரத்தில் எழும். என்னடா இது வாழ்க்கை? எதற்காக நாம் வாழ பிறந்து இருக்கிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் தேவை இல்லாமல் எழும். ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுடைய பிறப்பிற்கான அர்த்தத்தை தேடி அலைய வேண்டுமே தவிர! ஏன் பிறந்தோம்? என்கிற விரக்தியை உண்டாக்கி கொள்ளக்கூடாது. இது போன்ற சமயத்தில் சாமி படத்திற்கு முன்பு அமைதியாக தியான நிலையில் அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் குழப்பங்கள் அத்தனையும் உடனே தீரும். எல்லா மனிதர்களும் செய்யும் மிகப் பெரிய தவறு கடவுளை கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே நினைத்துக் கொள்வது ஆகும். நல்லது அல்லது மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுதும் கடவுளை நாம் உணர வேண்டும். நல்லது! கெட்டது! எதுவாக இருந்தாலும் நம்மை சுற்றியிருக்கும் போலியான மனிதர்களிடம் கூறுவதைக் காட்டிலும், நம்மை படைத்த இறைவனிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தால் வாழ்வில் என்றுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இப்படி நாம் செய்யும் முக்கியமான ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை வேண்டி வணங்கினால் தோல்வி என்பதே நமக்கு ஏற்படாது என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்



 🙏 திருச்சிற்றம்பலம்🙏



இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி கூட, ஒரே ஒரு நாளில் ராசியாக ஒற்றுமையாக மாறிவிடுவார்கள். 



சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள் உறவு என்பது சுமூகமாக இருக்கவே இருக்காது. அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு, அந்த குழந்தையின் மனசு நொந்து போகும் அளவிற்கு இவர்களது சண்டை இருக்கும். இதன் மூலம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுடைய நிம்மதியும் கெட்டுப்போகும். கணவன்-மனைவிக்குள் சண்டை வராமல் இருக்காது. நிச்சயமாக சண்டை என்ற ஒன்று குடும்பத்தில் இருந்தால் தான் இல்லற வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே இல்லற வாழ்க்கையாக அமைந்து விட்டால் அது சலிப்பு தட்டி விடும். ஏன் தான் திருமணம் செய்தோம் என்ற எண்ணத்திற்கு கொண்டு போய்விடும். சரி, வீட்டிலிருக்கும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் விரிசல் சில நாட்களிலேயே சரியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 


 மனைவி கணவனுடன் சண்டை வரக்கூடாது என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் நாரை வைத்து நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். தூபம் போட எப்படி நெருப்பை மூட்டுவோம் அப்படிதான். அந்த நெருப்பு அப்படியே இருக்கட்டும். மனைவி சாப்பிடும் போது தன்னுடைய தட்டில் சாதத்தை போட்டுக்கொள்ள வேண்டும். சாதத்தை எச்சில் செய்வதற்கு முன்பாகவே ஒரு பிடி சாதத்தை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விட வேண்டும். நிறைய சாதம் எடுக்க வேண்டாம். ஒரு சிறிய ஸ்பூன் அளவு சாதத்தை எடுத்து தனியாக வைத்தால் போதும்.



 சாப்பிட்டு முடித்த பின்பு, தனியாக எடுத்து வைத்த அந்த சாதத்தை, தூபக்காலில் தயாராக இருக்கும் நெருப்பில் போட்டு விட்டு, அந்த நெருப்பில் கொஞ்சமாக காய்ச்சாத பச்சை பாலில் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி விடுங்கள். பரிகாரம் அவ்வளவுதான். சாப்பிடும்போது எடுத்து வைத்திருக்கும் அந்த சாப்பாட்டை முதலில் நெருப்பில் போட்டு விட்டு, அதன் பின்பு அதை சாந்தப்படுத்த பசும்பாலை அந்த நெருப்பில் ஊற்றி விட்டோம். மதியம் சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு சாப்பிடும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இப்படி செய்தால் கணவன் மனைவி விரிசல் சரியாகிவிடுமா என்ன? நீங்களும் இதை சோதித்து தான் பாருங்களேன். பரிகாரத்திற்கு பயன்படுத்திய அந்த நெருப்பை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பலன் அளித்தால் நிச்சயமாக குடும்பத்தில் நிம்மதி நிலவும். சந்தோஷம் இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு விடிவு காலமும் பிறந்துவிடும். இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் தானே நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்

 *🌹மலரும் நினைவுகள்🌹*


*❤️இன்றைய சிந்தனை..*

*( 14.09.2018 )..*

.............................................

*'' மனதில் இருக்கட்டும் மகிழ்ச்சி..''*

.............................................


நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை நாம் முறையாகக் கையாள்கிறோமா என்பது தான், முக்கியமான கேள்வி. 


அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.


ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை,பலரின் வாழ்வில் காண முடிகிறது. 


குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மைப் பற்றி தவறாகப் பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறோம்.


குப்பைத் தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டு இருந்தால் என்னவாகும்? துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா. 


அதுபோலத் தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியைத் தான் எதிர்பார்க்கிறது. 


ஒருவர், உங்களைப் பாராட்டினாலும்,குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். 


பாராட்டும் போது பறப்பதும், குறை சொல்லும் போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.


யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் புறம் பேசி இருந்தால், உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும். 


அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்கு சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்து கொண்டு இருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள்.


அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதைத் தவிர்த்து விடுங்கள். 


ஒவ்வொருவருக்கு உள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது. 


இதைக் கண்டுபிடித்து, அதன் வழியில் பயணிக்கும் போது, இன்று கிடைக்கா விட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும். 


ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை. வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இதுதான்.எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும்.


ஆம்.,நண்பர்களே.,


‘மகிழ்ச்சி, அமைதியைத் தேடி பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.,


மகிழ்ச்சி, அமைதி உங்களுக்குள்ளே தான் இருக்கிறது..


ஆம்.,நமக்குள் தான் எல்லோமே இருக்கிறது. நமக்குள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு வெளியே தேடி அலைய வேண்டாம்..

********************************************************************************

எதிர்மறை சக்திகள் அகற்ற உதவும் உப்பு:


  உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்


ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது

ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது.


தினமும் உப்புத் தண்ணீரால்  வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்படுகிறது. 


ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்  துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.


கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /  கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.


உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.



 🔯பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம், அதற்குறிய ஆன்மீக பரிகாரகுறிப்புகளும்.

🔯புதிய தகவல்கள்.

ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

🔯ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :

ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.

ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம்.

ஆன்மிக குறிப்புகள் :

ஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும்.

🔯திங்கட்கிழமை பிறந்தவர்கள் :

வேடிக்கையான பேச்சோடு, பல விஷயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் விஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்பதால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள்.

சலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய விஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

திங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

🔯செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் :

நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள்.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு

 அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது.

🔯புதன்கிழமை பிறந்தவர்கள் 

அறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.

மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும்.

ஆன்மிக குறிப்புகள் :

புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.

🔯வியாழக்கிழமை பிறந்தவர்கள் 

இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.

முன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.

🔯வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் 

சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள்.

பொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். முக்கியமான விஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.

🔯சனிக்கிழமை பிறந்தவர்கள்

பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள்.

சனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள்.

ஆன்மிக குறிப்புகள் :

சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.

 எம் பெருமான் இனிய ஈசனே உன்னை பேசா நாள் எல்லாம் பிறவாத நாளே 🙏🙏

எதிர்மறை சக்திகள் அகற்ற உதவும் உப்பு:

  உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது

ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது.

தினமும் உப்புத் தண்ணீரால்  வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்படுகிறது. 

ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்  துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /  கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.

உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏

ஆலவாயர் அருட் பணி மன்ற குருவான என் அன்பு தந்தையே ஆத்ம நமஸ்காரம் 🙏🙏

இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற ஈசன் அருள் புரியட்டும் 🙏🙏


#உப்பு #தேன்  என்ன செய்யும்.


♥️உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!-


♥️உப்பின் தன்மை என்ன ?

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு... உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் , இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்

இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..


♥️ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .

உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் . சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...


♥️#தேன்....

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . 


♥️இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .

ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .

இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..


♥️மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-


♥️1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .


♥️2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .

தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .


♥️3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்

நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது 

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )

இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த

உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi .

உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது

கருவாடு ,உறுகாய்,போண்றவைகள் உதாரணம் ...


♥️நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...

தேன் தேவகுணம் உடையது

உப்பு அசுரகுணம் உடையது

தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்

உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும் ..


இவைகள் உடல் சார்ந்த விவரம் 

♥️அகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...



 அஷ்ட லிங்கங்கள்


        நினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலையில் பதினான்கு கி.மீ சுற்றளவு உள்ள கிரிவலப் பாதையில் *அஷ்ட லிங்கங்கள்* பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவை


1) *இந்திரலிங்கம்* இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  இவரை முதலில் வணங்கிய பின்னரே கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும். தொடர்புடைய கிரகங்கள் சூரியன் சுக்கிரன். 


2) *அக்னி லிங்கம்* அக்னி பகவான் பிரதிஷ்டை செய்த அக்னி லிங்கம் தொடர்புடைய கிரகம் சந்திரன். 


3) *எம லிங்கம்* எமதர்மன் பிரதிஷ்டை செய்த லிங்கம். செவ்வாய் இதனுடைய கிரகம்


 4) *நிருதி லிங்கம்* நிருதி ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் ராகு. 


5) *வருண லிங்கம்* வருண பகவான் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் சனி. 


6) *வாயு லிங்கம்* வாயு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் கேது.


 7) *குபேர லிங்கம்* குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் குரு. 


8) *ஈசான்ய லிங்கம்* ஈசானன் ஸ்தாபித்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் புதன். சுடுகாட்டில். உள்ள இந்த எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து அண்ணாமலை கோவிலுக்குள் சென்று நந்தியை முதலில் வணங்கி  இறைவனையும் இறைவியையும் தரிசித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். *திருச்சிற்றம்பலம்*