Saturday, March 6, 2021


🔱காயத்ரி மந்திரம் ஜபிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?🔱

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

 சப்த சிரஞ்சீவிகள், 27 நட்சத்திரங்கள், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்க, கடன் தொல்லை நீங்கும். அஷ்ட சித்திகளை பெற, சகல காரியங்களும் சித்தி பெறலாம்.  சகல தோஷங்களும் விலகும். வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்

காயத்ரி மந்திரம்: 

 ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் சவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்

 

No comments:

Post a Comment