Monday, April 5, 2021

 🌺🌿மூன்றடுக்கு கோவிலில் மூலிகை லிங்கம்🌺🌿


🌺🌿பல வகை லிங்கங்களைப் பார்த்திருப்போம்.மூலிகையால் ஆன லிங்கத்தைப் பார்க்க,மூன்றடுக்குள்ள,பிரான்மலை மங்கைபாகர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.


🌺🌿சிவகங்கை மாவட்டத்திலுள்ள இந்தக் கோவில்,மதுரை பொன்னமராவதி சாலையில்,65 கி.மீ.,துாரத்தில் உள்ளது.


🌺🌿இமயமலையில்,சிவன்-பார்வதி திருமணம் நடந்த போது அகத்தியர்,அந்த திருமணக்கோலத்தை தரிசித்த தலங்களில்,இதுவும் ஒன்று.


🌺🌿இம்மலையின் கீழ் அடுக்கில் அம்பிகை குயிலமுத நாயகியுடன்,கொடுங்குன்றநாதராகவும்,

மத்தியில் விசாலாட்சியுடன்,விஸ்வநாதராகவும்,

மேல் பகுதியில் தேனாம்பிகையுடன்,மங்கைபாகராகவும் காட்சி தருகிறார்,#சிவன்.


🌺🌿வேடர் பெண்ணான,வள்ளியை மணந்ததால்,திருத்தணி,வள்ளிமலை ஆகிய தலங்களில், முருகனுக்கு, தேன்,தினை மாவு நைவேத்யம் செய்கின்றனர்.


🌺🌿சிவன் கோவிலான இதுவும்,குறிஞ்சி நிலமான மலையில் அமைந்துள்ளதால்,இந்த நிலத்திற்குரிய இவ்வகை உணவே படைக்கப்படுகிறது.


🌺🌿மேலடுக்கு கோவில்,குடவறையாக அமைந்துள்ளது.இங்கு, மங்கைபாகர்,தேனாம்பிகையுடன் இணைந்து காட்சி தருகிறார்.கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தால்,அவர்கள் ஒன்று சேர,இவர்களை வணங்குகின்றனர்.


🌺🌿மங்கைபாகர் சிலை,ஒன்பது வகை மூலிகைகளின் சாறு எடுத்து செய்யப்பட்டது.எனவே,இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.பவுர்ணமியன்று புனுகு மற்றும் சாம்பிராணி தைலம் சாத்துகின்றனர்.


🌺🌿இதே சன்னிதியில் உள்ள உடையவர் லிங்கத்திற்கு,அபிஷேகம் உண்டு.கும்பாபிஷேகத்தின் போது சுவாமி சிலைகளுக்கு அடியில்,அஷ்டபந்தன மருந்து வைப்பது வழக்கம்.ஆனால்,இங்குள்ள சிவலிங்கத்துக்கு இதை வைப்பதில்லை.


🌺🌿அசுரர்களை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க முருகப்பெருமான்,இங்கு இரண்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து,வழிபட்டார்.இவை கொடுங்குன்றநாதர் சன்னிதி பிரகாரத்தில், சொக்கலிங்கம்,ராமலிங்கம் என்ற பெயர்களில் உள்ளன.இவ்விரு லிங்கங்களுக்கும் மத்தியில் முருகன்,பால ரூபத்தில் காட்சி தருகிறார்.


🌺🌿மங்கைபாகருக்கு ஒரு முறை அணிவித்த வஸ்திரத்தை, மறுபடியும்அணிவிப்பதில்லை.ஒரே நாளில் பல முறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும்,புது வஸ்திரமே அணிவிக்கப்படும்.


🌺🌿வள்ளியை ஆட்கொள்ள,முதியவர் வேடத்தில் வந்தார்,முருகன்.அந்த முருகனை,சிலை வடிவில் இங்கு காணலாம்.


🌺🌿இத்தலத்தின் விருட்சம்,உறங்காப்புளி.பல நுாற்றாண்டுகள் பழமையான இம்மரம் பூக்கும், காய்க்கும்!ஆனால்,பழுக்காது.காய்த்த நிலையிலேயே,புளி உதிர்ந்து விடும்.இதன் இலைகள்,இரவிலும் விரிந்தே இருக்கும்.


🌺🌿மங்கைபாகர் சன்னிதிக்கு மேலே ஒரு பாறையில்,'பெயரில்லா விருட்சம்'என்ற பெயரில்,ஒரு செடி உள்ளது.


🌺🌿வள்ளல் பாரி ஆண்ட இப்பகுதியில், சித்திரை மாதம்,'பாரி உற்சவம்' நிகழ்ச்சி நடக்கிறது.அப்போது, முல்லைக் கொடிக்கு,பாரி தேர் கொடுத்த காட்சி அரங்கேற்றப்படும்.


சிவாய நம 🙏 

திருச்சிற்றம்பலம் 

சர்வம் சிவசக்தி மயமே

எங்கும் சிவசக்தி நாமம் ஒலிக்கட்டும் 

அனைவருக்கும் சிவசக்தியின் அருள் கிடைக்கட்டும் 

உலகாளும் அம்மையப்பன் திருவருளுடன் அனைவருக்கும் இனிய சிவசக்தி காலை வணக்கங்கள் 🌷🙏🏻

ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள் 🌺🙏🏻🌺

No comments:

Post a Comment