Monday, April 5, 2021


 சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 


சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்


பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.


சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.


நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.


தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.


இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.


சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]


சரவணன், [03.04.21 05:40]

*சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*


*1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.*


*நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.*


*2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.*


*3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.*


*4. ஒவ்வொரு மனிதனுக்கும்  சூ‎ட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.*


*5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.*


*6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.*


*7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.*


*8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.*


*9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.*


*10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.*


*11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.*


*12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.*


*13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.*


*14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெருகும்


*15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.*


*16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.*


*17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.*


*18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.*


*19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.*


*20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.*


*21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.*


*22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.*


*23. வலி என்பது உடலின் மொழி.*

*அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.*


*24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.*


*25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.*


*26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.*


*27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.*


*28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.*


*29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.*


*30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.*


*31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.*


*32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.*


*33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.*


*34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.*


*35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.*


*36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.*


*37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.*


*38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.*


*39.  சூ‎ரிய  ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.*


*40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.*


*41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.*


*42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.*


*43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.*


*44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.*


*45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.*


*46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.*


*47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.*


*48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.*


*49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.*


*50. தூக்கம் என்பது,*

     *விழிப்புணர்வு அற்ற* *தியானம்.*

  

  *தியானம் என்பது,*

     *விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.*


*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*


நன்றி

No comments:

Post a Comment