Monday, April 5, 2021

 சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 


சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்


பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.


சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.


நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.


தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.


இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.


சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]


★·.·´🌺ஆன்மீகமலர்🌷`·.·★, [05.04.21 05:53]

உத்தவ கீதை


நற்குணங்கள் அடைவதற்குக் காரணங்கள் கீழ்கண்ட பத்து விதமான விஷயங்களான சாஸ்திரம், உணவு, சந்ததி, காடு, காலம், செயல், பிறப்பு, தியானம், மந்திரம், ஸம்ஸ்காரங்கள் ஆகியவைகளாகும்


1.  எதை திரும்ப திரும்ப படிக்கின்றோமோ, கேட்கின்றோமோ, பார்க்கின்றோமோ அவைகள்தான் அதற்கேற்ற குணத்தை கொடுக்கின்றது.  அதாவது ஞானேந்திரியங்களை எந்த விஷயத்தில் அதிகமாக பயன்படுத்துகின்றோமோ அதன் அடிப்படையில் தான் குணங்கள் அமைகின்றது


2.  எப்படிபட்ட உணவை உட்கொள்கின்றோமோ அதன் அடிப்படையில் குணங்கள் அமைகின்றது. அதர்ம வழியில் கிடைக்கும் உணவை உட்கொள்ளும்போது அதர்ம குணங்களை அடைகிறோம்


3.  நாம் யாரோடு நெருக்கமாக பழகுகின்றோமோ அவர்களுடைய குணங்கள், பழக்கவழக்கங்கள் நம்மையறியாமலே அடைந்து விடுவோம். நம் குணங்கள் அவர்களுக்கும் சென்றுவிடும்


4. நாம் அதிக நேரம் இருக்கின்ற சூழ்நிலைகள், புனித யாத்திரை செல்லுதல், வசிக்கும் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகள் அதற்கேற்ற குணங்களை அடையச் செய்யும்


5.  சந்தியா காலம் சாத்வீகமானது, பகல் நேரமானது ராஜஸமானது, இரவு நேரம் தாமஸமானது.  சாத்விக காலத்தில் சாத்விகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய சாதனங்களில் ஈடுபட வேண்டும்.  எதற்காக அதிக காலம் பயன்படுத்துகின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைந்துவிடுவோம்.


6.  எப்படிபட்ட செயல்களில் ஈடுபடுகின்றோமோ அதைப் பொறுத்தும் குணங்கள் அமைகின்றது.  நிஷ்காம கர்மம் – சாத்வீகமானது; காம்ய கர்மம் ரஜோ குணமாகவும், நிஷித்த கர்ம தாமஸமானதாகவும் இருக்க வைக்கிறது


7.  பிறத்தலின் போது தமோ குண பிரதானத்தில்தான் இருப்பார்கள்.  பள்ளியில் சேர்க்கும்போது  வித்யா தீக்ஷை. நாம் எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அதற்குத் தேவையான கல்வித்தகுதியை அடைவோம்.  மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்வது அதை கட்டாயம் அடைய வேண்டும் என்ற ஆசையினால்தான்


8. எந்த தேவதையை தொடர்ந்தி தியானம் செய்து கொண்டிருக்கின்றோமோ அதேபோன்று எந்த விஷயத்தை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுவோம்


9. எந்த வகையான மந்திரங்களை உச்சரிக்கின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைகிறோம்


10. எவையெல்லாம் பழக்கமாகி வைத்திருக்கின்றோமோ அவைகளை சாத்வீகமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வெற்றி அடைந்திட வேண்டும்.


மேலே கூறப்பட்ட பத்தும் நம்முடைய குணங்களை நிர்ணயிக்கின்றது, மாற்றி அமைக்கின்றது.

================

ஹரே ராம்

No comments:

Post a Comment