Wednesday, April 7, 2021

 #ஆன்மீக_குறிப்புகள்

1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

5. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.

9. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

10. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

11, சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.

17. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18, விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

21. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

22, எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

23, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

24, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

25.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.


26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.


27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.


28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.


29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது…🙏🙏🙏


*தினமும் ஒரு சண்டையால், உங்கள் குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டதா?

 சந்தோஷமான, சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கையை வாழ, இந்த தீபத்தை ஏற்றினால் போதும்.*


 *சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமா? குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வருவதும் போவதுமாக தான் இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே சதா காலமும் வேலையாக வைத்திருக்கக் கூடாது. ஆனால் சில வீடுகளில் பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்சனை! பிரச்சனை! முதலில் தேவையற்ற விவாதங்கள், வாக்குவாதங்கள் என்று தொடங்கி அந்த பிரச்சனையே குடும்பத்தை இரண்டாக பிரிக்கும் அளவிற்கு சென்றுவிடும். வீட்டில் எந்த நேரமும் சண்டை சச்சரவுகள் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி நிலைத்திருக்காது. மகாலட்சுமி தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. சண்டை சச்சரவுகள் இல்லாத நிம்மதியான குடும்பத்தை பெற ஆன்மீக ரீதியான என்ன வழிபாட்டினைச் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு குடும்பத்திற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும், சந்திர பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் குடும்ப பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆக சூரிய பகவானையும் சந்திர பகவானின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு நம்முடைய வீட்டில் எந்த முறையிலான வழிபாட்டினை செய்யலாம்?*


*இந்த பரிகார தீபத்திற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். மஞ்சள் கயிறு, ஒரு மண் அகல் தீபம், தீபம் ஏற்றுவதற்கு கட்டாயமாக விளக்கெண்ணெய் வேண்டும். பஞ்சு திரியை எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற நூலை வாங்கிக் கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளை நூலில் மஞ்சள் தடவி நிழலில் உலரவைத்து மஞ்சளாக மாற்றிக் கொண்டாலும் சரி. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துவிட்டு, அதன் மேல் மஞ்சள் கயிறை வட்டவடிவமாக சுற்றி வைத்து விடுங்கள். இந்த மஞ்சள் கயிறு மேல் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை குறிப்பாக அமாவாசை தினங்களில் தவறாமல் செய்து வர வேண்டும். அமாவாசை தினத்தன்று இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி குல தெய்வத்தையும் முன்னோர்களையும் வேண்டி, சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்*


 *அடுத்தபடியாக பவுர்ணமி தினத்தன்று இதேபோல் வழிபாட்டை உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளி பக்கத்திலோ அல்லது வீட்டிற்கு பின் பக்கத்திலோ இந்த வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் ஏற்றி வைக்கக் கூடிய இந்த தீப சுடரில் அந்த சந்திர பகவானின் கதிர்வீச்சு விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (அமாவாசை தினத்தில் எப்படி தாம்புல தட்டின் மேல் மஞ்சள் கயிறை வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தீர்களோ அதேபோல் தான், பௌர்ணமி தினத்தன்றும் தீபம் ஏற்ற வேண்டும்.) பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் இந்த தீப வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு மற்ற விஷயங்களை வீட்டில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. வீட்டில் அழுக்கு துணிகள் சேர்ந்தால், வீட்டில் சுவர்களில் விரிசல் விழுந்தால், நிலை வாசப்படி அசுத்தமாக இருந்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் கட்டாயம் வரும். எந்த பரிகாரங்களை செய்தாலும், வீட்டில் இருக்கும் உறவினர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்..

**********

ரசமணியின் பயன்களும் அதன் ரகசியங்களும


rasamani

ரசமணி


ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தும் போது தீராத நோய்களும் தீரும் என்று சித்தர்களின் வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.


rasamani


இப்படி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த பாதரசத்தை கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டு என்கிறது சித்தர்களின் ரகசிய குறிப்பு.


திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது.


ரசவாதத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட சிலைதான் பழனியில் உள்ள ‘ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலை’. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘போகர் சித்தர்’ இந்த நவபாஷாண சிலையை ரசவாதத்தின் மூலம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சிலையின் மீது பட்டு வெளிவரும் தீர்த்தத்தை குடித்தால் தீராத நோய்களும் தீர்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை.


ரசமணியின் பயன்கள் சித்தர்களுக்கு


இரும்பைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி


சித்தர்களின் ரசவாதம் வெறும் வைத்தியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. ஞானசக்தி, யோகசக்தி இவைகளிலும் சித்தர்கள் சிறந்து விளங்கினார்கள். எந்த ஒரு உலோகமானாலும் அதை தங்கமாக மாற்றும் உலோகமாற்றும் வித்தையை சித்தர்கள் அறிந்திருந்தனர். இந்த வித்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடிய இல்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கலியுகத்தில் இது அறியப்படாமல் இருப்பதே நல்லது.


இடம்பெயர்தல்


சித்தர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர ரசகுளிகை என்று கூறப்படும் ரசமணியை பயன்படுத்தி வந்தார்கள். முறையான மந்திரங்களை ஓதி, சரியான மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ரசமணியை சித்தர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயற வேண்டும் என்றால் இந்த ரசமணியை வாயில் போட்டு கொள்வார்கள். இது சித்தர்களுக்கு காற்றில் பறக்கும் சக்தியை கொடுக்கின்றது. இப்படித்தான் போகர் இந்தியாவிலிருந்து சீன தேசத்திற்கு சென்றதாக கோரக்க சித்தர் கூறுகின்றார்.


இப்படிப்பட்ட மந்திர தந்திரங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் ஒன்றும் ஞானிகளோ, சித்தர்களோ மகான்களோ அல்ல. பணத்தாசை இல்லாமல், மற்ற ஆசைகளை எல்லாம் துறந்த சித்தர்களுக்குள்ளேயே இந்த வித்தையெல்லாம், சித்தர்கள் மறைவது போலவே, இப்படிப்பட்ட மந்திர, தந்திரங்களும் மறைந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு பயன்படும் வகையில், மருத்துவத்தை சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இந்த ரசமணியால் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி காண்போம்.


வாதம் பித்தம் கபம்


மனிதனின் உடலுக்கு இந்த மூன்று நிலைகளும் மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் சமமாக இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாதம் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு வாயு. இது நம் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பித்தம் என்பது நம் உடலின் வெப்பநிலையை தருகின்றது. கபம் என்பது நம் உடலுக்கான குளிர்ச்சியைத் தருகின்றது. இந்த மூன்றும் நம் உடம்பில் அதிகரித்தாலும், குறைந்தாலும் நம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. வாதம் கூடினாலும், பித்தம் கூடினாலும், கபம் கூடினாலும் நம் உடலில் 1482 வியாதிகள் வந்துவிடும். இந்த வாதம் பித்தம் கபம் சமநிலை படுத்த இந்த ரசமணி உதவி செய்கிறது.


ரத்த அழுத்தம்


ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும். நம் உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட இது உதவி செய்கிறது. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது.


எதிர்மறை சக்திகள்


நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும்.


பிரகாசமான முகம்


இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு நம் முகம் பிரகாசமாக ஜொலிக்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் நம் அறிவு வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கப்படுகிறது. நமது வயது முதுமை அடைந்தாலும், நம் உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது. என்றும் நம் தேகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இதை அணிந்து கொள்ளலாம்.


தாம்பத்திய வாழ்க்கை

கணவன்-மனைவி இடையே ஒற்றுமைய


ை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க ரசமணிக்கு ஒரு பங்கு உண்டு. விந்தணுவை கெட்டியாக்கும் சக்தியும் ரசமணிக்கு உண்டு.


வியாபாரம்


நல்ல முறையில் நேர்மையாக நடத்தப்படும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு இந்த ரசமணி துணையாக நிற்கும். நாம் வாகனத்தில் செல்லும் பொழுது விபத்துக்களை தடுக்க ரசமணி பயன்படுத்தப்படுகிறது.


சிறு குழந்தைகளுக்கு


காத்து, கருப்பு அண்டாமல் சிறுகுழந்தைகளை பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் இருந்து பாதுகாக்க ரசமணியானது உதவுகின்றது.


அஷ்டமா சித்தி


இந்த ரசமணி வைத்து அஷ்டமா சித்திகளையும் விளையாடிப் பார்க்கலாம் என்பது சித்தர்களின் வாக்கு. ஆனால் அதைப் பற்றின குறிப்புகள் நம் கண்களில் புலப்படவே இல்லை. கலியுகத்திற்கு அது தேவையும் இல்லை. அஷ்டமாசித்திகளை பற்றி அறியாவிட்டாலும், மனிதனுக்கு பயன்தரக்கூடிய ரசமணியை பற்றி அறிந்து இருப்பது மனிதர்களின் பாக்கியம்.


ரசமணி கிடைக்கும்



No comments:

Post a Comment