Sunday, April 4, 2021

 🙏 சற்குருவே சரணம் 🙏


 #சுழினைச்சோதி

ஐந்து ஆதாரங்கள் மனம், வாக்கு, காயம், மூலமாக வாசிதானாகவே இயங்கி ஆறாவது ஆதாரம்மான புருவமத்தி சொருக்கவீட்டின் சச்சிதானந்த பரபொருளை அடையும் நிலை


🏵️புருவமத்தி சொர்க்க வீடு சச்சிதானந்தம்

 அங்கே ‌உருவிலாத வொளிகாணலாம் சச்சிதானந்தம்

🏵️இருதயமே மத்தியாகும் சச்சிதானந்தம்

 நாடி கருவுதயம் கலங்காதே சச்சிதானந்தம்

🏵️குதகுய்யத்திற்க்கு நடு சச்சிதானந்தம்

    இடைதியான விதித்துக் குரைத்தோம் சச்சிதானந்தம்

🏵️நாசிநுனியில் சக்கரம் சச்சிதானந்தம்

   புஷ்பம் பிண்டத் திருவேணியில் சச்சிதானந்தம்

🏵️வாசியை ஒடுக்குவது ‌சச்சிதானந்தம் உண்மை

  வாசியின்றி ஆசிபெறலாம் சச்சிதானந்தம்

🏵️மனமென்ற மதயானை சச்சிதானந்தம்‌

    குரு அங்குசத்தால் வாட்டிவி‌டும் ‌சச்சிதானந்தம்

🏵️நெருப்பான ‌அடிமுடிபார்‌ ‌சச்சிதானந்தம்

 ம‌த்திகுருவாக்கைத் தீட்டிப்பார் ‌சச்சிதானந்தம்

🏵️ஆட்டுவோனிருக்க உடல் சச்சிதானந்தம்

நிஜம் ஓட்டுவான் மனம் குருபாதம் சச்சிதானந்தம்

🏵️உள்ளமே பீடமான சச்சிதானந்தம்

     நமக்கு உணர்வே சிவலிங்கமான சச்சிதானந்தம் 

🏵️கற்பமே வன்னியாகும் சச்சிதானந்தம்

    உண்மை காயகற்பம் சற்குருபோதம் சச்சிதானந்தம்..........(குருவாக்கு)

No comments:

Post a Comment