Monday, April 5, 2021

 சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 


சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்


பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.


சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.


நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.


தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.


இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.


சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]


சரவணன், [05.04.21 05:40]

தெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற பரிகாரம்!


உங்களது வேண்டுதல் நிறைவேற நீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களது உடலில் எந்த பாகத்தில் உள்ளது என்பதை அறிந்து அந்த பாகத்தை தொட்டு உணர்ந்து வணங்கும் ஒரு புதுமையான பரிகாரம் பற்றிய பதிவு!


நம் பூமியை 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. 


அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி அந்த நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்படுத்துகிறது. 


ஒவ்வொரு மனிதனின் உடம்பிலுள்ள குறிப்பிட்ட பாகத்திலும் 

அந்த நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது.


அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை.


உடலில் நமது 

ஜென்ம நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால் பலன் கிடைக்கும்.


ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான் 

பலன் பெருகும்.


எனவே அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


கீழே உள்ள அட்டவணையை பார்த்து அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எந்த பாகத்தில் மறைந்து செயல்படுகிறது  என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.


நட்சத்திரம் - உடலில் மறைந்துள்ள பாகம்

அசுவினி,பரணி, கிருத்திகை

ஆகிய நட்சத்திரங்கள்

-நெற்றி முழுவதும் உள்ள இடமாகும்


ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்கள்- நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும் உள்ள இடமாகும்


புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு தோள்களாகும்.


ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் - மார்பு பகுதியாகும்.


சித்திரை நட்சத்திரம் உள்ள இடம் வயிறு பகுதியாகும்.


சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள்-- புஜங்கள் இரண்டுமாகும்.


அனுசம் - பாலின உறுப்பாகும்.


கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு கைகளாகும்.


பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள்-- தொடைகள் இரண்டுமாகும்.


திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருகால்

பாதங்களாகும்.


மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒன்று தான் உங்கள் நட்சத்திரமாக இருக்கும்.


எனவே நீங்கள் எந்த தெய்வத்திற்கு எங்கு வழிபாடு செய்தாலும் உங்கள்  ஜென்ம நட்சத்திரம் உடலில் மறைந்துள்ள பாகம் எதுவோ அதை நினைவுகூர்ந்து அங்கு தொட்டு வணங்கி வேண்டினால் உங்களின் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.


நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி.


அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏


ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்.


இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment