Sunday, April 4, 2021

 _*🌱🌱🌱



இன்றைய சிந்தனை*_ 



ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.


2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.


3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


4. எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும்.


5. வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.


6. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.


7. யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.


8. வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


9. பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள்.


10. ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள்

🌱🌱🌱



துளசியை வழிபட வேன்டிய காலங்கள்


1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம்.


2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.


3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால்,  நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும்.


5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.


6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.


7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன்  உடனே கிட்டும்.


8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.


9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.


10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெறுவர்.


11.மகா விஷ்ணுவிற்கும்,ஸ்ரீதுளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலன் அடையலாம்.

🥀🌷🥀🌷

🌱🌱🌱




தியானத்தின்

மைய ஆழம்.

ஓஷோ.


உங்கள் தியானத்தில் 

ஆழமாகச் செல்லும் 

பொழுது உங்களுக்கு 

பயம் தோன்றும்..


தியானமும் ஒரு வகையில் 

உங்கள் இறப்பை (மனம் ) 

நோக்கிச் செல்லும் பயணம்தான் 


அப்பொழுது நீங்கள் சண்டை 

போட முனைவிர்கள்.


உங்கள் உள் மனம் திறக்கும் 

பொழுது 'அது சுழல் போலதான் காட்சி தரும்.


அதனுள் செல்ல உங்களுக்கு 

மிகவும் தைரியம் தேவை.


அதனுடன் போராட நினைத்தால், 

நீங்கள் பல துண்டுகளாகி விடுவிர்கள்.


அதனுடன் இயைந்து, தைரியமாக 

உள்ளே செல்ல வேண்டும்


உங்கள் சக்தியை கொஞ்சம் 

கூடச் செலவழிக்க தேவையில்லை.


அதை அனுபவித்து, தைரியமாக 

விழிப்போடு செல்லுங்கள்.


சற்று நேரத்தில் நீங்கள் தியானத்தின் அடித்தன்மையில் இருப்பதை உணர்வீர்கள்.


பெரும்பாலோர் தியானத்தின் அடிக்குச் செல்லும் போது, பயந்து.வெளியே வரத் துடிப்பார்கள்.


அதனுடன் போராடுவார்கள்'


அப்பொழுது அவர்கள் மனம் இறப்பதற்குப் பதிலாக அவர்கள் உடல் இறந்து விடும்.


இல்லாவிட்டால் பைத்தியமாக 

மாறி விடுவார்கள்.


நீங்கள் தைரியமாகத் தியானத்தின் ஆழத்திற்கு சென்றால். அதிலிருந்து மிக எளிதாக வெளியே வந்து விடலாம்.


தியானம் செய்யும் பொழுது. மூச்சு முட்டுவது போல் இறந்து விடுவது போல் உணர்வு தோன்றும்.


ஏதோ உங்களை கீழே இழுப்பது 

போல் உணர்வு ஏற்படும்.


பயப்பட வேண்டாம். தைரியமாக 

அதன் போக்கிலே செல்லுங்கள்.


இயேசு ஒரு சமயம் நம்ப முடியாத கருத்தான்றை கூறினார்.


அதை எப்படி விளக்குவது என்று கிறிஸ்துவப் பாதிரிமார்களுக்கு தெரியவில்லை :


கெட்ட வைகளோடு போராடதே, 

அதை நீ எதிர்க்காதே.


ஏனெனில் அதை நீ எதிர்த்தால் 

அது தான் உன்னை ஜெயிக்கும்.


அதன் முன்னால் உன்னுடைய சக்தி ஒன்றுமேயில்லை. நீ நிச்சயம் தோற்கடிக்கப்படுவாய்.


நீ எதிர்க்கவில்லையென்றால், 

உன்னை யாரும் ஜெயிக்க முடியாது.


சண்டை போட்டு எதிர்த்தால் தோல்வி தானாகவே நிச்சயமாக ஏற்படும்.


ஜூடோ மற்றும் ஜுஜிட் சூ சண்டையின் தத்துவம் கூட இதுதான்


ஒருவன் இந்தச் சண்டையில் 

தேர்ச்சி பெற்றால் அவனை 

யாராலும் ஜெயிக்க முடியாது.


ஏனெனில் அவன் சண்டை 

போடுவதே இல்லை.


நீங்கள் அவனை குத்த முயன்றால், 

அவன் எதிர்க்காமல், உங்கள் 

சக்தியையும் வாங்கிக் கொள்கிறான்


உங்கள் எதிர்ப்பு சக்தி அவனிடம் 

சென்று விடுகிறது.


அவன் பதில் எதிர்ப்பு செய்வதில்லை

சற்று நேரத்தில் அந்த வலிவு மிக்கவன் தன் சக்தியை இழந்து விடுவான்.


பிறகு ஜூடோ சண்டை தெரிந்த வலிவு அற்றவன் கூட, அவனை எளிதில் வென்று விடலாம்.


ஜூடோ சண்டையில் ஒருவன் எப்படி சண்டை போடாமல் தற்காத்து கொள்வது என்பது பற்றித்தான் சொல்லித் தருகிறார்கள்.


ஓஷோ.

🥀🌷🥀🌷

கடவுள் எங்கே 

இருக்கிறார்???


பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 

மூன்று மாத காலம் பணி புரிய 

சென்று கொண்டிருந்தார்கள்.


மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.


இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.


ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும், அதை பொருட்படுத்தாமல், 

ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.


அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.


அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.


ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம் என்றார் மேஜர்.


அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்,

"சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும், நாம் பூட்டை உடைக்கலாமே" என்றார்.


இது ஒரு தர்மசங்கடமான நிலை 

மேஜருக்கு, 'தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா? அல்லது இப்படிப்பட்ட 

ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா?'என்று குழம்பினார்.


சிறிது நேரம் கழித்து, அவர் அறிவை 

விட அவரின் மனம் ஜெயித்தது.


வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்.


அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.


அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாராகினார்கள்.


நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம், நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.


இது ஒரு சூழல், நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க...


மேஜர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை 

மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்...


அடுத்த மூன்று மாத காலத்தில், அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றினார்கள்.


அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.


அதே வழியில் அவர்கள் திரும்ப, 

அதே தேனீர் கடை.


ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.


அதன் முதலாளியும் இருந்தார்.


ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த 

பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.


எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் 

உண்டு களித்தனர்.


அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.


அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.


ஒரு வீரர் கேட்டார், தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..?என்று கேட்டார்.


அப்படி சொல்லாதீர்கள் தம்பி... கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது. 


மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். 


நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.


அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது.கடவுளிடம் கதறி அழுதேன்...


ஐயா கனவான்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.


உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் 

சொல்ல இயலாது.


கடவுள் இருக்கிறார்' என்பதற்கு இதை விட நான் என்ன சொல்ல...?என்று முடித்தார் அவர்.


அவர் கண்களில் அதற்கான 

நம்பிக்கை மிளிர்ந்தது.


அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் 

அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.


அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.


அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.


அந்த முதியவரை தழுவிக்கொண்டு...

ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.கடவுள் இருக்கிறார்.தாத்தா ,உங்கள் தேனீர் மிக அபாரம்..


இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.


யாரும் யாருக்கும் கடவுளாகலாம்...

உங்களுக்குள் அறிவாய் இறையே


பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்.


வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்...


அன்பே கடவுள்.

ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம்

சிவமே அன்பாகும்.


நாத்திகம் பேசும் நண்பர்க்தெல்லாம்

அன்பே சிவமாகும்.

No comments:

Post a Comment