Thursday, April 26, 2018

படித்ததில் பிடித்தது !

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் !!
 
👉 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு சாப்பிடுங்கள்.
 
👉 நமது வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான செரிமான அமிலங்கள் உள்ளது. இந்த செரிமான அமிலங்கள் நாம் உண்ணும் உணவை செரிக்க வைப்பதற்கு உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். எச்சிலானது உணவை உடைப்பதற்கான என்சைம்களை சுரக்க உதவுகிறது. 
 
👉 ஆனால், நாம் உணவுடன் தண்ணீர் அருந்துவதால் இந்த செரிமான அமிலங்கள் நீர்த்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
 
👉 சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரை குடித்து வரலாம். அவ்வாறு சாப்பிடும் முன்பாக வெந்நீரைக் குடிப்பதால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
 
👉 சப்பாத்தி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது போன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 
 
👉 எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 
 
👉 சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பு மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிக்கலாம். ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.
***************************************************************************
 
உடலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின்கள் !! 
 
வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்கியத்திற்கு இவை தேவைப்படுகின்றன. நமது உடலில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்தே எந்த வைட்டமின் நமது உடலில் குறைகிறது என்பதைக் கண்டறிந்து அந்த வைட்டமின்களை பெற எந்த விதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
 
வைட்டமின் ஏ பயன்கள் :
 
கண் பார்வை, மரபணு படியெடுத்தல், நோய் எதிர்ப்புச் செயல்பாடு, எலும்பு வளர்சிதை மாற்றம், இரத்த உற்பத்தி, சரும ஆரோக்கியம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது.
 
வைட்டமின் ஏ குறைந்தால் :
 
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர இதுதான் முக்கியக் காரணம்.
 
வைட்டமின் பி பயன்கள் :
 
வளர்சிதைமாற்ற தாக்கங்களுக்கு வைட்டமின் பி துணையாக இருக்கும், ஆரோக்கியமான தோல், முடி, தசை நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, நரம்புத் தொகுதி தொழிற்பாட்டைக் கூட்டும், உயிரணு வளர்ச்சி, உயிரணுப்பிரிவை மேம்படுத்துதல், ரத்தசோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.
 
வைட்டமின் பி குறைந்தால் :
 
இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
 
வைட்டமின் சி பயன்கள் :
 
உடல் சீராக வளர உதவும்.
உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. 
பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. 
 
வைட்டமின் சி குறைந்தால் :
 
வைட்டமின் சி குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீக்கம் உண்டாகும். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
 
வைட்டமின் டி :
 
வைட்டமின் டி இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். 
வைட்டமின் டி போதிய அளவு இல்லாததால் மனஅழுத்தம், உடல் பருமன் முதுகுவலி, மூச்சிரைப்பு, உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
வைட்டமின் ஈ பயன்கள் :
 
வைட்டமின் ஈ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. 
கண்புரை ஏற்படுவதைத் தவிர்க்கும்.
இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
 
வைட்டமின் ஈ குறைந்தால் :
 
வைட்டமின் ஈ குறைந்தால் மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு, தசைகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  *******************************************************************************

கோலம் போடுவது எதற்கு? இதற்கு பின் மறைந்துள்ள ரகசியம் என்ன? 
 
ஏன் கோலம் போட வேண்டும்?
 
 வீடுகளில் கோலம் போடுகிறோம். இவை சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. ஆனால் கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்ப்பது ஏன்? 
 
🌟 இதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தான் என்ன? கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
 
🌟 வீட்டில் உள்ள பெண்கள் மகிழ்ச்சி, வெறுப்பு, கஷ்டம் என பல மனநிலைகளில் இருப்பார்கள். இதில் வெறுப்பு என்பது மட்டும் வீட்டில் இருக்கவே கூடாது. 
 
🌟 அப்படி வெறுப்பு இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவரின் மகிழ்ச்சியையும் சீர்குலைந்து விடும். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பு உணர்வை கவர்ந்து கொள்ளும்.
 
🌟 இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது நேர்த்தியாக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
 
🌟 ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
 
🌟 குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
 
🌟 நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் வரவேண்டும். இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். ஆக, அவர்கள் வகுத்த அறிவியல் தத்துவங்கள் பொய்யல்ல என்பதே உண்மை.
*****************************************************************************
 
இப்படிதானா உங்களுடைய வாழ்க்கையும்?
 
ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் அவருக்கு குணமாகவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, 'நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?" என்றார். அதிர்ச்சி அடைந்த கணவன், 'உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றார். அதற்கு மனைவி சொன்னாள் : எனக்கொன்றும் இல்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க. அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குரைக்கறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க. அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை வெட்னரி டாக்டர் தான் குணப்படுத்த முடியும்" என்றார். இதைக்கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, 'என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?" என்று முடித்தாள் மனைவி.
 
ஒருவரின் கலையை திருடமுடியாது..!!
 
ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது. 'ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால், மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்தவில்லையா?
 
அதற்கு தேனீயின் பதில் : இல்லவே இல்லை! ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும்தான் திருட முடியும். ஆனால், தேனை உண்டாக்கும் கலையை ஒருபோதும் அவன் என்னிடமிருந்து திருட முடியாது.
 
 
இன்றைய பொன்மொழிகள்..!!
 
⏩ உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே...!!
நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு..
 
⏩ இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 
நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.
 
⏩ ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது 
மனதின் அமைதித்தன்மையைப் பொறுத்தது.
 
⏩ எவன் ஒருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ,
அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான்.
**********************************************************************************

பொன்மொழிகள்..!!
👍 நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்..

👍 நாம் வாழும் போது யாரை அழுக வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்..

👍 உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!!





சிந்திக்க வைக்கும் வரிகள்..!!
👌 ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர் தான் . . . . . .

👌 குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை. ஆனால், அதற்கு பயப்படாமல் அவரை பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர் தான் . . . . . . .

👌 ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம் நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல். அதற்கு பெயர் தான் . . . . . . . .

👌 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் . . . . . . . . .

👌 உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர் தான் . . . . . . . . .

                     பெருத்தமான விடை . . . . . . . ."நம்பிக்கை" -அதானே எல்லாம்
*************************************************
நம் முன்னோர்கள் இதை அணிய சொல்ல காரணம் என்ன? 
 
வளையல் குலுங்க... வளரும் உடல் ஆரோக்கியம்!
 
 நம்முடைய கலாச்சாரத்தில் பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஒன்று...! வளையல் அணியும் பழக்கத்தை ஏதோ ஒரு காரணமாகத் தான் நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் நாம் அடையும் மருத்துவ பயன்கள் ஏராளம். 
 
நேர்மறையான எண்ணங்கள் :
 
👉 வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
 
👉 இதனால் நம்முடைய எண்ணங்கள் தெளிவு பெற்று, மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி வளையல் அணிவதால், அது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.
 
எந்த வடிவம் சிறந்தது? 
 
👉 இன்றைய காலக்கட்டத்தில் பல வடிவங்களில் வளையல்கள் கிடைத்தாலும், பாரம்பரிய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. 
 
👉 வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்க குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.
 
எந்த வகை? என்ன பயன்?
 
👉 தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது சிறந்தது. உடல் பருமனாக இருப்பவர்கள் செம்பு வளையல்கள் அணிவதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும். 
 
👉 பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது.
 
👉 சிப்பி, கிளிஞ்சல் வளையல்கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை. 
 
கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிவதற்கான அறிவியல் காரணங்கள்?
 
👉 கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் வயிற்றில் இருக்கும் குழந்தையில் மூளை நன்றாக செயல்படும்.
 
👉 பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும். 
 
வளையல் எப்படி அணிய வேண்டும்?
 
👉 மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சிறியதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. 
 
எந்த நிறத்தில் அணிய வேண்டும்?
 
👉 மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
 
👉 குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்திற்குள்ளது. ஊதா நிற வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பழுப்பு நிற வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும்.
 
👉 மஞ்சள் நிற வளையல்கள், நேர்மறையான எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். 
 
இனி, ஆரோக்கியத்தை நினைத்து அணிவோம் வளையல்!
 

No comments:

Post a Comment