Thursday, April 26, 2018

படித்ததில் பிடித்தது !

இது உண்மை தானே !!
 
😇 பைக் வாங்குறப்ப இருந்த சந்தோஷம்..
பெட்ரோல் போடும் போது வர்றதே இல்லை...
 
😇 சின்ன வயசுல நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம்..
இப்ப கடைக்காரன்கிட்ட சில்லரை காசு இல்லைனா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு...
 
😇 உலகிலேயே அதிக பொய்களை கொண்ட இரண்டு லெட்டர்கள்..
Love Letter !! Leave Letter !!
 
 
இல்லை.. இல்லை.. இல்லை..!!
 
பிரச்சனை இல்லாவிட்டால்
அவன் மனிதன் இல்லை
 
கடிந்து கொள்ளாவிட்டால்
அவன் கணவன் இல்லை
 
சண்டைகள் போடாவிட்டால் 
அவர்கள் கணவன், மனைவி இல்லை
 
அன்பை பொழியாவிட்டால்
அவர்கள் பெற்றவர்கள் இல்லை
 
தொல்லைகள் தராவிட்டால் 
அவர்கள் பிள்ளைகள் இல்லை 
 
நம்மை புரிந்து கொண்டால்
அவர்கள் உறவினர்கள் இல்லை
 
நம்மை புரிந்து கொள்ளாவிட்டால்
அவர்கள் நண்பர்கள் இல்லை
 
மனிதர்களை கஷ்டபடுத்தாவிட்டால்
அவர் கடவுள் இல்லை..
 
 
அந்தக்காலம்.. இந்தக்காலம்..!!
 
😆 களிய தின்னுட்டு காளைய 
அடக்குனது அந்தக்காலம்....
 
😆 பூரிய தின்னுட்டு கோழிய கூட
புடிக்க முடியாதது இந்தக்காலம்...
 ***********************************************************************************
இருள் என்பது இல்லையா? 
 
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா? என்று. 
 
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். 
 
ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
 
மாணவன் அமைதி காக்கிறான். 
 
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.
 
ஆசிரியர் அனுமதிக்கிறார். 
 
மாணவன் : 'குளிர்நிலை" என்று ஏதேனும் இருக்கிறதா?
 
ஆசிரியர் : ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?
 
மாணவன் : மன்னிக்கவும். தங்களின் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
 
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
 
மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும், இருளையும் அல்ல. 
 
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. 
 
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை. 
 
அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான்.
 
 
இன்றைய பொன்மொழி !!
 
👉 நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்பும் எப்போதுமே மண்டியிட வேண்டிய அவசியமில்லை..
 
👉 நம்பிக்கையுடன் உனது முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படியில் ஏறு..
 
👉 உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துணிவுடன் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உனக்கு வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!.
 
👉 வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் நம்பிக்கையில்லை எனில், நீ நிச்சயம் தோற்றுப்போவாய்..
****************************************************************************
 
கோடை டிப்ஸ் : உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள் !!
 
உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள் !!
 
👉 கோடை காலம் வந்துவிட்டது. இனி தான் நமது உடலை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் நமது உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.
 
மண் பானை குடிநீர் :
 
👉 மண் பானை குடிநீரை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். நமக்கு சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
 
இளநீர் :
 
👉 இளநீரில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.
 
லெமன் ஜூஸ் :
 
👉 தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது.
 
தர்பூசணி :
 
👉 தர்பூசணி உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சுத்தன்மையை போக்குகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது.
 
சோற்றுக்கற்றாழை :
 
👉 சோற்றுக்கற்றாழை அதிகக் குளிர்ச்சியை தரக்கூடியது. சோற்றுக்கற்றாழையின் சதைப் பகுதியை ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம்.
 
நெல்லி :
 
👉 நெல்லிக்காயில் வைட்டமின் 'சி" நிறைந்துள்ளது. இதனுடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.
 
நீர்மோர் :
 
👉 தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.
 
காய்கறிகள் :
 
👉 வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்ற பழங்கள் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
 
👉 கோடை காலத்தில் நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.


 

No comments:

Post a Comment