Wednesday, April 11, 2018

அணைவரும் சிரிப்பதற்காக அல்ல.. சிந்திப்பதற்காக!

இது சிரிப்பதற்காக அல்ல.. சிந்திப்பதற்காக!
 
ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது, அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.
 
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், 'இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலை வழங்கப்படும்" என்றார், ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..
 
'நேரம் குறைவாக உள்ளது" என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...

 
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் 'நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை" என்றனர்.
 
அதில் இருவர் மட்டும் 'எந்த பதிலும் எழுதவில்லை" என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
 
அதன்பின், அந்த நிறுவன மேலாளர், 'விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்" என்றார்.
 
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவன-மேலாளரிடம் கேட்டனர்.
 
அதற்கு அந்த மேலாளர் சொன்னார், 'எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியைப் படித்துப் பாருங்கள்". படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்குச் சென்றனர், அந்த பத்தாவது கேள்வி இதுதான்..
 
'10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்." இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
 
இது சிரிப்பதற்காக அல்ல... சிந்திப்பதற்காக! அதுவும், தேர்வு நேரமல்லவா... மாங்கு மாங்கு என்று (Hardwork) 'மார்க்"-குக்காக உழைப்பதைவிட திறம்பட உழைப்பதே (Smartwork) அறிவுப்பூர்வமானது. என்ன கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்து பதில் எழுதுங்கள்... கேட்ட கேள்விக்கு போதுமான பதிலை மட்டும் எழுதுங்கள். நேரம் போதுமானதாக இருக்கும். வாழ்த்துகள்!!

No comments:

Post a Comment