Thursday, June 14, 2018

நீங்க.. ஏன் இதை பயன்படுத்தக்கூடாது ! மருத்துவக் குறிப்புகள் !

                          படித்தில் பிடித்தது

👉 விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களின் மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
 
👉 சாம்பிராணி, மஞ்சள், சர்க்கரை ஆகியவற்றை போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
 
👉 நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும், கொப்பளமும் ஏற்படாது.
 
👉 வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மேலும், இது மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.
 
👉 அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
 
👉 ஒரு தேக்கரண்டியளவு சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து, வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
 
👉 சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலி நீங்கும்.
 
👉 புடலங்காயின் இலைச்சாற்றை, காலையில் குழந்தைகளுக்கு தந்தால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காயை சமைத்து உண்பதால் உடல் பருமன் குறையும்.
 
👉 கேரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி நிற்கும், உடல் வலுவாகும் மற்றும் பித்த நோய்கள் தீரும்.
 
👉 பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
 
👉 சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
 
👉 முட்டைக்கோஸ் உடன் பசுவின் வெண்ணெயை கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி சரியாகும்.
 
👉 பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
 
👉 பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

No comments:

Post a Comment